இரண்டாவது திருமணம் குறித்து முதன்முறையாக மனம்திறந்து பேசிய நடிகை மேக்னா ராஜ் - என்ன சொல்லீருக்காங்க தெரியுமா?

First Published Aug 23, 2022, 9:22 AM IST

இரண்டாவது திருமணம் குறித்து எந்த முடிவு எடுத்தாலும், சிரஞ்சீவி எப்போதும் என்னுடன் இருப்பார் என்கிற நம்பிக்கை இருக்கிறது என நடிகை மேக்னா ராஜ் தெரிவித்துள்ளார்.

பிரபல கன்னட நடிகர் சுந்தரின் மகளான மேக்னா ராஜ், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் நடிகர் அர்ஜுனின் உறவிரும், நடிகருமான சிரஞ்சீவி சர்ஜாவை கடந்த 2018-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை இரண்டு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது.

கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ந் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக நடிகர் சிரஞ்சீவி சர்ஜா காலமானார். அவர் இறந்தபோது மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தார். கணவர் இறந்த துயரத்தில் இருந்த மேக்னா ராஜுக்கு ஆறுதல் தரும் விதமாக அந்த ஆண்டே ஆண் குழந்தை பிறந்தது. அப்போது தனது கணவனே தனக்கு பிள்ளையாக வந்து பிறந்திருப்பதாக கூறி நெகிழ்ந்தார் மேக்னா.

இதையும் படியுங்கள்... இரண்டு தலைமுறை ஸ்டண்ட் மாஸ்டர்களை களமிறங்கிய நெல்சன்..வேறலெவலில் ரெடியாகும் ஜெயிலர்..

கணவரின் மறைவுக்கு பின்னர் படிப்படியாக அதிலிருந்து மீண்டு வரும் நடிகை மேக்னா, சமீப காலமாக படங்களிலும் நடித்து வருகிறார். அவரிடம் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இரண்டாவது திருமணம் செய்துகொள்வீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மேக்னா, “சிலர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளுமாறு கூறுகிறார்கள், சிலரோ வேண்டாம் என்கிறார்கள். நான் இன்னும் அதுபற்றி முடிவெடுக்கவில்லை.

இரண்டாவது திருமணம் குறித்து நான் எந்த முடிவு எடுத்தாலும், சிரஞ்சீவி எப்போதும் என்னுடன் இருப்பார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இவை எல்லாவற்றையும் விட எனது குழந்தையின் எதிர்காலம் தான் முக்கியம். அதைப் பற்றி மட்டுமே நான் சிந்தித்து வருகிறேன். எனது மகனுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து கொடுக்க வேண்டும் என்பதே எனக்கு இருக்கும் ஆசை” என கூறி உள்ளார் மேக்னா ராஜ்.

இதையும் படியுங்கள்... வாவ்... ஹாலிவுட் ரேஞ்சுல இருக்கே..! ஆர்யாவின் கேப்டன் பட டிரெய்லர் பார்த்து மெர்சலான ரசிகர்கள்

click me!