கோலிவுட்டில் அறிமுகமானபோது பல்வேறு விமர்சனங்களை சந்தித்து இன்று முன்னணி நடிகர்களாக உயர்ந்து நிற்பவர்கள் ஏராளம். உதாரணத்துக்கு விஜய், தனுஷ், சூர்யா போன்ற நடிகர்கள் சினிமாவில் அறிமுகமானபோது, இவர்களெல்லாம் ஏன் நடிக்க வருகிறார்கள், இந்த மூஞ்சியெல்லார் யார் பார்ப்பது என கிண்டல் செய்தனர், ஆனால் அவர்கள் அதனை கண்டு துவண்டுவிடாமல் தங்களது விடாமுயற்சியால் இன்று வெற்றிகரமான நாயகர்களாக உயர்ந்து நிற்கின்றனர்.
இவர்களைப் போன்றே சினிமாவில் நடிகராக உயரவேண்டும் என்கிற ஆசையுடன் அறிமுகமாகி இருப்பவர் லெஜண்ட் சரவணன். இவர் கூட சினிமாவில் தனக்கு இன்ஸ்பிரேஷன் விஜய் தான் என பல பேட்டிகளில் கூறி இருக்கிறார். ஆரம்பத்தில் தனது கடை விளம்பரங்களில் மட்டும் நடித்து வந்த லெஜண்ட் சரவணன், தி லெஜண்ட் படம் மூலம் சினிமாவிலும் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்துள்ளார்.
பெரும் பொருட்செலவில் லெஜண்ட் சரவணனே தயாரித்து இருந்த இப்படம் அவருக்கு பல கோடி நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கடும் அப்செட்டில் உள்ளாராம் அண்ணாச்சி. விரைவில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ள அவர், முதல் படத்தில் செய்த தவறை இரண்டாம் படத்தில் செய்துவிடக் கூடாது என்பதில் தீர்க்கமாக உள்ளாராம்.
முதல் படத்தில் அனுபவ இயக்குனர்கள் ஏமாற்றத்தை தந்ததால், அடுத்த படத்தை இயக்கும் பொறுப்பை இளம் இயக்குனருக்கு வழங்க உள்ளாராம் அண்ணாச்சி. அவரின் அடுத்த படத்தை புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளதாகவும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தையும் லெஜண்ட் சரவணன் தான் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ஆன்லைனில் இறைச்சி விற்பனை செய்யும் பிரபல நிறுவனத்தின் பிராண்ட் தூதுவராக நயன்தாரா நியமனம்