ஆன்லைனில் இறைச்சி விற்பனை செய்யும் பிரபல நிறுவனத்தின் பிராண்ட் தூதுவராக நயன்தாரா நியமனம்

First Published Aug 8, 2022, 11:12 AM IST

Nayanthara : தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, தற்போது பிரபல இறைச்சி நிறுவனத்தின் பிராண்ட் தூதுவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, நடிப்பை தாண்டி பல தொழில்களையும் செய்து வருகிறார். சில நிறுவனங்களில் பங்குதாரராகவும் அவர் இருந்து வருகிறார். குறிப்பாக விக்னேஷ் சிவன் உடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் நயன்தாரா, அதன்மூலம், பல்வேறு இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளித்து வருகிறார்.

திருமணத்துக்கு பின்னரும் சினிமாவில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, தற்போது இந்தியில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி தெலுங்கில் மோகன்ராஜா இயக்கத்தில் உருவாகி உள்ள காட்ஃபாதர் எனும் திரைப்படம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நயன்தாரா. இப்படத்தில் சிரஞ்சீவி நாயகனாக நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... ஜிகுஜிகு உடையில் சிக்கென போஸ் கொடுத்து... கிளாமர் குயினாக மின்னும் ஐஸ்வர்யா மேனன் - வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்

இந்நிலையில், நடிகை நயன்தாரா தற்போது பிரபல நிறுவனத்தின் பிராண்ட் தூதுவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஆன்லைனில் இறைச்சி விற்பனை செய்வதில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வரும் ஃபிபோலா-வின் பிராண்ட் தூதுவராக நயன்தாரா நியமிக்கப்பட்டு உள்ளார். இந்நிறுவனத்துக்காக அவர் நடித்த விளம்பரங்கள் விரைவில் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது.

தென் மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் செயல்பட்டு வரும் இந்த ஃபிபோலா நிறுவனத்தில் பிராண்ட் தூதுவரானதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள நயன்தாரா, இந்த பிராண்ட் உடன் நீண்ட மற்றும் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக கூறி உள்ளார். நடிகை நயன்தாரா, மிகப்பெரிய அசைவ விரும்பி, குறிப்பாக கடல் உணவுகள் அவரும் மிகவும் பிடிக்கும் என்பதால் இந்த நிறுவனத்துடன் அவர் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... ‘இந்தி தெரியாது போடா’னு சொல்லிட்டு... இப்போ இந்தி படத்தை வெளியிடுவது ஏன்? - சர்ச்சைகளுக்கு உதயநிதி சொன்ன பதில்

click me!