லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள அப்படத்தில் விஷ்ணு விஷாலும், விக்ராந்த்தும் கதையின் நாயகர்களாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். அதுமட்டுமின்றி இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், கேமியோ ரோலில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக உள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் வருகிற பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது.