கோலிவுட்டே கெஞ்சி கேட்டும் செய்யாத விஷயத்தை... பாலிவுட் படத்துக்காக செய்யப்போகிறாரா நயன்தாரா?

Published : Aug 17, 2023, 03:06 PM IST

ஜவான் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி உள்ள நயன்தாரா, அப்படத்துக்காக பல ஆண்டுகளாக கடைபிடித்து வந்த கொள்கையை தளர்த்த உள்ளாராம்.

PREV
15
கோலிவுட்டே கெஞ்சி கேட்டும் செய்யாத விஷயத்தை... பாலிவுட் படத்துக்காக செய்யப்போகிறாரா நயன்தாரா?

தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவருக்கு கடந்தாண்டு விக்னேஷ் சிவன் உடன் திருமணம் ஆனது. திருமணத்துக்கு பின்னரும் சினிமாவில் தொடர்ந்து ஹீரோயினாக கலக்கிக் கொண்டிருக்கும் நயன்தாரா, தற்போது பாலிவுட்டில் எண்ட்ரி கொடுத்துள்ளார். அந்த வகையில் இந்தியில் அவர் நடித்துள்ள முதல் திரைப்படம் ஜவான். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார் நயன்.

25

ஜவான் திரைப்படத்தை அட்லீ இயக்கி உள்ளார். இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியும், நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகிபாபுவும் நடித்துள்ளனர். ஜவான் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் 7-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இது பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளதால் இப்படத்திற்கான புரமோஷன் பணிகளை இந்தியா முழுவதும் மேற்கொள்ள படக்குழு திட்டமிட்டு உள்ளது.

35

ஜவான் படத்திற்கு அனிருத் தான் இசையமைத்து உள்ளார். இப்படமும் மூலம் பாலிவுட்டில் எண்ட்ரி கொடுத்துள்ளார் அனி. ஜவான் படத்திலிருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ளன. அந்த இரண்டு பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில், ஜவான் படத்திற்காக நடிகை நயன்தாரா, தான் பல ஆண்டுகளாக கடைபிடித்து வந்த கொள்கையை தளர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்... 400 கோடிலாம் இல்ல... ஜெயிலர் படத்தின் 7 நாள் வசூல் இவ்ளோதான் - அதிகாரப்பூர்வமாக அறிவித்த சன் பிக்சர்ஸ்

45

தென்னிந்திய திரையுலகில் நடிகை நயன்தாரா, தான் நடித்த படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மாட்டார். அதையே அவர் ஒரு பாலிசியாவும் வைத்துள்ளார். இதுவரை அஜித், விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களின் நிகழ்ச்சிகளில் கூட அவர் கலந்துகொண்டதில்லை. ஆனால் சமீப காலமாக தனது ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படங்களுக்கான புரமோஷனில் மட்டும் தலைகாட்டி வருகிறார் நயன்.

55

இந்த நிலையில், விரைவில் ரிலீஸ் ஆக உள்ள ஜவான் படத்துக்காக தன்னுடைய நோ புரமோஷன் பாலிசியை நயன்தாரா தளர்த்த உள்ளதாக தகவல் பரவி வருகிறது. ஷாருக்கான் தனக்கு பிடித்த நடிகர் என்பதால் நயன்தாரா இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த முடிவால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தாலும், கோலிவுட் பிரபலங்கள் கோபமடைந்துள்ளனர். கோலிவுட் பிரபலங்கள் பலர் கெஞ்சி கேட்டும் புரமோஷனுக்கு வர மறுத்த நயன்தாரா, தற்போது பாலிவுட் போனதும் பாலிசியை மாற்றினால் என்னென்ன பிரச்சனையெல்லாம் எதிர்கொள்ளப்போகிறாரோ என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... நாளுக்கு நாள் யூத் ஆகிக்கொண்டே போகும் லெஜண்ட் சரவணன்... அவரின் ஒரிஜினல் வயசு தெரிஞ்சா நீங்களே ஷாக் ஆகிடுவீங்க!

Read more Photos on
click me!

Recommended Stories