அடி தூள்... ஷாருக்கானுக்கு ஜோடியாக அட்லீ படத்தில் இணைந்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா!

First Published Sep 3, 2021, 5:39 PM IST

இயக்குனர் அட்லீ, முதல் முறையாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து இயக்கி வரும் படத்தில், நடிகை நயன்தாரா இணைந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
 

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வருபவர்களில் ஒருவர் அட்லீ. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனரான இவர் 'ராஜா ராணி'  படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்திற்கு அடுத்ததாக தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில், என தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார். 
 

என்னதான் அட்லீ மற்ற படங்களைப் பார்த்து காப்பி அடிக்கிறார் என்று குற்றச்சாட்டுக்கள் இருந்து வந்தாலும் இவர் இயக்கிய படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. 
 

இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக பாலிவுட் சினிமா கால் பாதிக்க ஆயத்தமானார் அட்லீ. பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் உறுதி செய்யப்பட்டது. 
 

இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் கடந்த சில நாட்களாகவே விறுவிறுப்பாக நடந்து வருவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள புதிய தகவலில், நடிகை நயன்தாரா இந்த படத்தில் இணைந்துள்ளாராம்.

புனேவில்  நடந்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் தற்போது, நயன்தாரா கலந்து கொண்டு நடிக்க துவங்கியுள்ளாராம். நடிகை நயன்தாராவை தொடர்ந்து பாலிவுட் நடிகை சானியா மல்ஹோத்ரா என்பவரும் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்திற்கு 'ஜவான்' என்ற பெயர் வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் சில தகவல் வெளியானது, ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!