கேபிஒய் பாலா இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அறுபதாம் கல்யாண திருமணத்திற்கு ரூ.80 லட்சம் வரையில் செலவாகும் என கூறுகிறார். இதன் காரணமாக பணம் திரட்டுவதற்காக காந்தி தன்னிடம் உள்ள பழைய சொத்தை விற்க முயல்கிறார், அதை ஒரு கார்ப்பெரேட் கம்பெனி பிரச்சனை செய்கிறது. காந்தி இந்த பணத்தை எப்படி ஏற்பாடு செய்து, தன் மனைவியின் அறுபதாம் கல்யாண ஆசையை நிறைவேற்றுகிறார் என்பது தான் படத்தோட மீதி கதை.
கதிராக நடித்து இருக்கும் கேபிஒய் பாலா திருந்தி காந்தி மற்றும் கண்ணம்மாவுக்கு எப்படி உதவி செய்கிறார் என்பதும், முதுமையிலும் தன் மனைவியை காதலித்து அவள் ஆசையை நிறைவேற்ற நினைக்கும் காந்தி கதாபாத்திரமும், இப்படத்தில் வரும் ரோட்டில் டான்ஸ்ம் கிளைமெக்ஸில் இயக்குநர் செரீஃப் ரசிகர்கள் மனதில் இத்திரைப்படத்தை தூக்கி நிறுத்தியுள்ளார்.