கேஜிஎப் 3 சர்ச்சைக்கு...முற்று புள்ளி வைத்த தயாரிப்பாளர்..என்ன சொன்னார் தெரியுமா?

First Published May 15, 2022, 4:46 PM IST

கே ஜி எப் 3ம் பாகம் அக்டோபர் மாதம் தொடங்குவதாக சில தகவல்கள் இணையத்தில் பரவி வந்த நிலையில் தயாரிப்பாளரே தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.

kgf 2

கடந்த 2018 -ம் ஆண்டு வெளியான கேஜிஎப் திரைப்படம் அப்போது செம ஹிட் அடித்தது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகி இருந்த இந்த பாகத்தில் ராக்கி பாய் உருவான விதம் குறித்து கதை வடிவில் கூறப்பட்டது. இந்த முதல் பாகம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து இரண்டாம் பாகத்திற்கான வித்திட்டது.

kgf 2

கேஜிஎப் 2 படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி , ரவீனா டண்டன், சஞ்சய் தத், ஈஸ்வரி ராவ், சரண், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தன. மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. கிட்டத்தட்ட 10 ஆயிரம் திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகி இருந்த கேஜிஎப் 2 ரசிகர்கள் மத்தியில் அதிர வைக்கும் வெற்றி பெற்றது.

kgf 2

 ரூ. 320 கோடி ரூபாய் கொடுத்து அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றி உள்ள கேஜிஎப் 2 திரைப்படம் வெளியாகி 1 மாதம் கடந்துள்ள நிலையிலும் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று வருகிறது.  தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படும் இந்த படம் மொத்தம் 1200 கோடிகளுக்கு அதிகமாக வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

kgf 2

இரண்டாம் பாகத்தின் இறுதியில் கேஜிஎப் 3 அறிவிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சமீபத்தில் வெளியான இந்த பாகத்தில் நாயகன் கொலை செய்யப்படுகிறார். இவ்வாறு இருக்க அடுத்த பக்கத்தில் என்ன சொல்லப்போகிறார்கள் என்பது குழப்பமாக இருந்த நிலையில் அடுத்த பக்கத்தில் ராக்கி பாயின் வெளிநாட்டு க்ரைம் குறித்து சொல்லப்பபோவதாக தகவல் கசிந்தன.

kgf 2

கேஜிஎப் 3 இரண்டு பாகங்களை காட்டிலும் மாஸாக உருவாக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு இந்த படம் வரும் அக்டோபர் மாதம் தொடங்குவதாக சில தகவல்கள் இணையத்தில் பரவி வந்தன. இதற்கு பதிலளித்த  தயாரிப்பாளர், கே ஜி எப் 3 இப்போதிக்கு தொடங்கவில்லை, அது வதந்தி தான், கண்டிப்பாக தொடங்கும் போது நாங்களே அறிவிப்போம் என கூறியுள்ளார்.

click me!