பின்னர் செய்தியாளர் ஒருவர், பொன்னியின் செல்வனுக்குப் பிறகு உங்கள் சம்பளத்தை உயர்த்தி விட்டீர்களாமே ?என கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள கார்த்தி : படத்துக்கு படம் சம்பளத்தை உயர்த்த நானும் தான் ஆசைப்படுகிறேன். ஆனால் யார் தருவார்கள் ? உழைப்புக்கேற்ற ஊதியம் ஒழுங்கா வந்தாலே போதும். என்னை பொறுத்தவரை சம்பளத்தை பற்றி பெரிதாக கருதுவதில்லை. அண்ணனை போல விருதெல்லாம் வாங்க எனக்கும் ஆசை உண்டு. ஆனால் இந்த மாதிரி படங்கள் எனக்கு அமையவில்லை. எண்டர்டெயின்மெண்ட் படங்கள் தான் அமைகிறது என கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...இந்த வயசுல ஹனிமூன் வேறயா?...கூட்டுசேர்ந்து பழிவாங்கும் பாக்கியலட்சுமி...
சமீபகாலமாக தங்களத்தை படம் ஓரளவு வெற்றி பெற்றவுடன் நூறு கோடி வரை சம்பளத்தை முன்னணி நாயகர்கள் உயர்த்துகிறார்கள் என்கிற சர்ச்சை கிளம்பி வரும் நிலையில், உழைப்புக்கேத்த ஊதியம் போதுமே என கார்த்திக் கூறியிருப்பது பெரிய நடிகர்களை குத்தி காட்டுகிறாரோ என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.