இறுதியில், அந்த தொடரில் பும்ரா, ஷமி போன்ற முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து காயம் காரணமாக விலகியதால், நடராஜனுக்கு டெஸ்ட் அணியிலும் இடம் கிடைத்தது. அதிலும் தன் திறமையை நிரூபித்த அவர், அந்த ஒரே தொடர் மூலம் உலகமெங்கும் பேமஸ் ஆனார். இவ்வாறு சின்னப்பம்பட்டியில் இருந்து சிட்னி வரை கலக்கிய நடராஜனின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க அப்போதே பலரும் முயன்றனர்.