அப்போது நான் சென்று ரிஷப் ஷெட்டியுடன் நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டேன். என் நண்பர்களும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இப்படிப் பேசிக்கொண்டிருந்தபோது நாங்கள் இருவரும் ஒரே ஊர்க்காரர்கள், குந்தாபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. ஊரை விட்டு வெளியே, அதுவும் பெங்களூருவில் சந்தித்தபோது, இயல்பாகவே நாங்கள் இருவரும் ஒரே ஊர்க்காரர்கள் என்ற காரணத்தால் விரைவில் நெருக்கமாகிவிட்டோம். அதன் பிறகு, ஃபேஸ்புக்கில் ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்புவதன் மூலம் நெருங்கிய நட்பு வளர்ந்தது. பின்னர், மொபைல் எண்களைப் பரிமாறிக்கொண்டு நட்பு காதலாக மாறியது.