அப்படி வாலி எழுதிய அந்த பாடல் வரிகளில் கண்ணதாசனை மிகவும் கவர்ந்தது, “கங்கைகொண்டான் என்மேல் கருணை கொண்டான், பாதி மங்கை கொண்டான் எந்தன் மனதைக் கொண்டான்... திரை திங்கை கொண்டான், நெஞ்சை திருடிக் கொண்டான்; இதை யாவையும் கொண்டான், எந்தன் மாலையும் கொண்டான்” என்கிற வரிகள் தான். இதைக்கேட்டதும் தேவாரத்தில் வரும் வரிகளை தான் பயன்படுத்தி இருப்பதாக நினைத்தாராம் கண்ணதாசன்.