அதன்பின்னர் ஜூன் மாதம் விஜய் சேதுபதியின் மகாராஜா, ஜூலையில் தனுஷின் ராயன், ஆகஸ்டில் தங்கலான், செப்டம்பரில் விஜய்யின் கோட், அக்டோபரில் ரஜினிகாந்தின் வேட்டையன் மற்றும் சிவகார்த்திகேயனின் அமரன் என கடந்த 6 மாதங்களில் மட்டும் 7 நூறு கோடி வசூல் படங்களை கொடுத்திருக்கிறது தமிழ் சினிமா. இதில் அதிகபட்சமாக விஜய்யின் கோட் படம் ரூ.450 கோடி வசூலித்து இருந்தது. அதற்கு அடுத்தபடியாக சிவகார்த்திகேயனின் அமரன் படம் 250 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றிநடைபோட்டு வருகிறது.