தேவர் மகன் படத்துக்காக நண்பனிடம் இருந்தே கதையை சுட்ட கமல்... இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே?

Published : Sep 11, 2024, 02:46 PM ISTUpdated : Sep 11, 2024, 02:50 PM IST

Thevar Magan Story Theft : உலகநாயகன் கமல்ஹாசன் தேவர்மகன் படக் கதையை திருடி தான் படமாக்கி இருப்பதாக சர்ச்சை எழுந்தது அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
15
தேவர் மகன் படத்துக்காக நண்பனிடம் இருந்தே கதையை சுட்ட கமல்... இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே?
Thevar Magan

நடிகர் கமல்ஹாசனின் கெரியரில் மிகப்பெரிய வெற்றியை ருசித்த படம் என்றால் அது தேவர் மகன் தான். இப்படம் கடந்த 1992-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் மாஸ் வெற்றியை ருசித்தது. இப்படத்தை பரதன் இயக்கி இருந்தார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை கமல்ஹாசன் எழுதி இருந்ததாக படத்தில் குறிப்பிட்டு இருந்தனர். தமிழ் சினிமாவில் படம் எடுக்க வருபவர்களுக்கு அப்படம் ஒரு விக்கிப்பீடியாவாக திகழ்ந்து வருகிறது.

தேவர்மகன் படத்தின் கதையை தான் 7 நாட்களில் எழுதி முடித்துவிட்டதாக கமல்ஹாசனே பல்வேறு பேட்டிகளில் கூறி இருக்கிறார். இப்படி அவர் உரிமை கொண்டாடும் இந்தக் கதை அவருடையது இல்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா... ஆனால் அதுதான் நிஜம் என்றும் கூறப்படுகிறது. 

25
Kamal, revathi

தேவர்மகன் படத்திற்கு முன்னர் கமல்ஹாசன் நடித்த குணா படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்தது. இதனால் வெற்றி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தாராம் கமல்.

அந்த சமயத்தில் கரகாட்டக்காரன் என்கிற மாஸ் ஹிட் படத்தை கொடுத்த கங்கை அமரனை யதார்த்தமாக சந்தித்த கமல், அவரிடம் கிராமத்துக் கதையம்சம் கொண்ட படம் ஏதேனும் இருக்கிறதா என்று கேட்க, அதற்கு இரண்டு நாள் கழித்து வந்து கோடாங்கிப்பட்டியில் ஒரு மாடுபிடி காட்சியை சொல்லி கதையை விவரித்திருக்கிறார் கங்கை அமரன். கமலுக்கும் அந்தக் கதை பிடித்துப்போக அவர்கள் அந்த படத்துக்கு அதிவீர பாண்டியன் என பெயரும் வைத்துவிடுகிறார்கள்.

இதையும் படியுங்கள்... சூர்யாகிட்ட இந்த ஒரு கெட்ட பழக்கம் இருக்கு; இதனால டெய்லி சண்டை வரும் - ஜோதிகா சொன்ன சீக்ரெட்

35
kamal, sivaji

பின்னர் இதற்கான கதை விவாதத்தின் போது, இரண்டு பெரிய குடும்பம் இருக்கு, அப்போது தேர் நின்றுபோகிறது. இதனால் கோவில் பூட்டப்படுகிறது. பின்னர் ஹீரோவால் அந்த கோவில் தேர் மீண்டும் நகர்கிறது. இப்படி படத்தின் சீன்கள் அனைத்தையும் கமலிடம் விவரமாக சொல்லிவிட்டு சின்னவர் பட வேலைகள் இருந்ததால் அதில் பிசியாகிவிட்டார் கங்கை அமரன். அதையடுத்து கமல் இளையராஜாவை சந்தித்து தேவர்மகன் படம் பற்றி பேசி இருக்கிறார்.

45
Thevar Magan Story Theft

அதைக்கேட்டதும் கங்கை அமரனிடம், கமல் பரதனை வைத்து ஒரு கிராமத்து படம் பண்ணுகிறார் அது உன் கதை போலவே இருக்குது என இளையராஜா கேட்க, கங்கை அமரன் அதிர்ந்து போனாராம். பின்னர் கங்கை அமரனையே நேரில் சந்தித்த கமல், அதிவீர பாண்டியன் படத்தை அப்புறம் செய்யலாம் என சொன்னாராம். அதுமட்டுமின்றி இளையராஜாவிடம் தேவர்மகன் படத்தில் வரும் சாந்துப்பொட்டு சீன் கங்கை அமரன் சொன்னது என சொன்ன கமல், கதை அவருடையது என்று சொல்லவில்லையாம்.

55
Gangai Amaran

மறுபுறம் தன்னுடைய அதிவீர பாண்டியன் பட கதையை வைத்து கமல் தேவர் மகன் படத்தை மட்டும் எடுக்கவில்லை, விருமாண்டி படத்தையும் எடுத்துள்ளார் என்று ஒரு குண்டை தூக்கிப்போட்டுள்ளார் கங்கை அமரன். அதுவரை நண்பர்களாக இருந்த கமலும் கங்கை அமரனும், அதிவீர பாண்டியன் பட பஞ்சாயத்துக்கு பின் பேசிக்கொள்ளவே இல்லையாம். இப்படி கமல் தேவர்மகன் கதையை 7 நாளில் எழுதியதினார் என பெருமையாக சொல்லிக் கொள்வதற்கு பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் ஒளிந்திருக்கிறது என்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... இளையராஜா இசையில் பாடிக்கொண்டிருக்கும் போதே தேம்பி தேம்பி அழுத ஜானகி! எந்த பாட்டுக்கு தெரியுமா?

Read more Photos on
click me!

Recommended Stories