கழுத்தை அறுப்போம்... சனாதனம் பற்றி பேசியதால் கமலுக்கு கொலை மிரட்டல்!

Published : Aug 10, 2025, 03:51 PM ISTUpdated : Aug 10, 2025, 03:55 PM IST

சனாதானத்திற்கு எதிராகப் பேசியதால் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். நடிகர் ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர்.

PREV
14
கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல்

சனாதானத்திற்கு எதிராகப் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கு, நடிகர் ரவிச்சந்திரன் என்பவர் கொலை மிரட்டல் விடுத்ததாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

24
கட்சியினர் அளித்த புகார்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவரும், ஓய்வு பெற்ற ஐ.ஜி-யுமான மௌரியா, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்குச் சென்று இந்த புகாரை அளித்துள்ளார்.

34
கமல்ஹாசனின் கழுத்தை அறுப்போம்

அகரம் ஃபவுண்டேஷன் சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், கமல்ஹாசன் சனாதானத்திற்கு எதிராக சில கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சின்னத்திரை நடிகரான ரவிச்சந்திரன், கமல்ஹாசனின் கழுத்தை அறுப்போம் என கொலை மிரட்டல் விடுத்ததாக மக்கள் நீதி மய்யம் கட்சி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளது.

44
காவல் துறை விசாரணை

இந்தச் சம்பவம் தொடர்பாக, காவல் ஆணையர் அலுவலகத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் காவல் ஆணையரை நேரில் சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இந்த மிரட்டல் குறித்து காவல் துறை தற்போது விசாரணை நடத்தி வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories