Published : Aug 10, 2025, 03:51 PM ISTUpdated : Aug 10, 2025, 03:55 PM IST
சனாதானத்திற்கு எதிராகப் பேசியதால் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். நடிகர் ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர்.
சனாதானத்திற்கு எதிராகப் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கு, நடிகர் ரவிச்சந்திரன் என்பவர் கொலை மிரட்டல் விடுத்ததாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
24
கட்சியினர் அளித்த புகார்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவரும், ஓய்வு பெற்ற ஐ.ஜி-யுமான மௌரியா, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்குச் சென்று இந்த புகாரை அளித்துள்ளார்.
34
கமல்ஹாசனின் கழுத்தை அறுப்போம்
அகரம் ஃபவுண்டேஷன் சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், கமல்ஹாசன் சனாதானத்திற்கு எதிராக சில கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சின்னத்திரை நடிகரான ரவிச்சந்திரன், கமல்ஹாசனின் கழுத்தை அறுப்போம் என கொலை மிரட்டல் விடுத்ததாக மக்கள் நீதி மய்யம் கட்சி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக, காவல் ஆணையர் அலுவலகத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் காவல் ஆணையரை நேரில் சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இந்த மிரட்டல் குறித்து காவல் துறை தற்போது விசாரணை நடத்தி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.