சிறுவயது முதலே தமிழ் மொழியின் மீது அதிகம் பற்று கொண்டிருந்த கருணாநிதி, நாவல்கள் மற்றும் எண்ணற்ற கவிதைகளை எழுதி, தனது எழுத்துத் திறமையை மெருகேற்றி வந்தார். அதனை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டுசெல்லும் விதமாக, நாடகங்களுக்கும், திரைப்படங்களுக்கும் திரைக்கதைகளை எழுதினார் கலைஞர்.
தமிழகத்தில் திராவிட கொள்கைகள் இன்றளவும் வேரூன்ற முக்கியமான காரணம் கருணாநிதி தான். அவர் திரைக்கதை எழுதிய பெரும்பாலான படங்களில் திராவிடக் கொள்கைகளை விதைத்து அதனை மக்கள் மனதில் புகுத்தினார்.