ரேகாவுக்குப் பிறகு நடிகை ஹேமமாலினி உடன் நெருக்கமாக பழகி வந்த ஜீதேந்திரா அவரை திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் நடிகை ஹேமமாலினி தன்னுடைய சுயசரிதையி, தன்னுடைய பெற்றோர் தான் ஜீதேந்திராவை தனக்கு திருமணம் செய்துவைக்க விரும்பியதாகவும், ஆனால் தாங்கள் காதலிக்கவில்லை எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஷோபாவுடனான திருமணத்திற்குப் பிறகு ஸ்ரீதேவி மற்றும் ஜெயபிரதா ஆகிய நடிகைகள் உடனும் காதல் கிசுகிசுவில் சிக்கினார் ஜீதேந்திரா. இப்படி ரியல் லைஃப் மாமாகுட்டியாக வலம் வந்துள்ள நடிகர் ஜீதேந்திராவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது மகன் துஷார் கபூர் தந்தையை போலவே பாலிவுட்டில் நடிகராக வலம் வருகிறார். அவரது மகள் ஏக்தா கபூர், தொலைக்காட்சித் துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... மும்பையில் செட்டில் ஆனது இதுக்குத்தானா! திடீரென இந்தி படத்தில் நடிக்க கமிட்டான சூர்யா- அப்போ வாடிவாசல் நிலைமை?