சுதா கொங்கரா படத்துக்கு பின்னரும் சூர்யா, வாடிவாசல் படத்தில் நடிக்கப்போவதில்லை என்கிற தகவல் தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஏனெனில், சுதா கொங்கரா படத்துக்கு பின்னர் சூர்யா, பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம். அப்படத்தை ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்க உள்ளதாகவும், வரலாற்று கதையம்சம் கொண்ட படமாக உருவாக உள்ள இப்படத்திற்கு கர்ணா என பெயரிடப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.