பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் 10 நாட்களே எஞ்சி உள்ளதால், அதன் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படக்குழுவினர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொன்னியின் செல்வன் 2 படத்தை புரமோட் செய்து வருகின்றனர். இதுதவிர சமூக வலைதளங்களிலும் இப்படத்திற்கான புரமோஷன் படு ஜோராக நடக்கிறது.
24
கடந்தாண்டு பொன்னியின் செல்வன் முதல் பாகம் ரிலீஸ் ஆனபோது கார்த்தி டுவிட்டரில் தனது பெயரை வந்தியத்தேவன் என மாற்றினார். அதேபோல் திரிஷா குந்தவை எனவும், விக்ரம் ஆதித்த கரிகாலன் எனவும், ஜெயம் ரவி அருண்மொழி வர்மன் எனவும் தங்களது பெயர்களை டுவிட்டரில் மாற்றிக்கொண்டனர். அது ரசிகர்கள் மத்தியிலும் கவனம் பெற்றது.
அதேபோல் தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்திற்காகவும் பெயரை மாற்ற முடிவு செய்து முதலில் திரிஷாவும், ஜெயம் ரவியும் தங்களது பெயர்களை குந்தை, அருண்மொழி வர்மன் என மாற்றினர். அவர்கள் பெயரை மாற்றியதும் அவர்களது ப்ளூ டிக் பறிக்கப்பட்டது. இதனால் உஷாரான கார்த்தியும், விக்ரமும் தங்களது பெயரை மாற்றவில்லை.
44
இந்நிலையில், இந்த ப்ளூ டிக் பறிக்கப்பட்ட விவகாரம் குறித்து திரிஷாவும் ஜெயம் ரவியும் புரமோஷன் நிகழ்ச்சியின் போது மனம்விட்டு பேசியுள்ளனர். அதன்படி படத்தின் புரமோஷனுக்காக தான் பெயரை மாற்றியதாகவும், விருப்பப்பட்டு பெயரை மாற்றி ப்ளூடிக்கை இழந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் அதனை மீட்டெடுக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.