இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வந்த திரைப்படம் 'ஜெயிலர்'. இந்த திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்து பாசிடிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. நாளுக்கு நாள் ஜெயிலர் படத்தின் வசூல் அதிகரித்து கொண்டே செல்வதால், இந்த படத்தை தயாரித்த சன் பிச்சர்ஸ் நிறுவனமும் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளது.
இதன் மூலம் கடந்தாண்டு வெளியாகி ரூ.500 கோடி வசூலித்த பொன்னியின் செல்வன் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் சாதனையை ஜெயிலர் முறியடித்து உள்ளது. அதே போல் 'விக்ரம்' படத்தின் வசூலையும் 10 நாட்களில் முறியடித்து கெத்து காட்டியது.
இந்நிலையில் தற்போது ஜெயிலர் படத்தின் 12-ஆவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது அதன்படி இப்படம் 540 கோடி வசூலித்துள்ளதாக தெரிகிறது. இந்த தகவலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.