2023 சென்னை புத்தகக் கண்காட்சியில், ‘ஜெய்பீம்' நூலாக வெளியாகிறது!

First Published Jan 5, 2023, 7:50 PM IST

2023 சென்னை புத்தகக் கண்காட்சியில், ‘ஜெய்பீம்' படக்குழுவினருடனான கலந்துரையாடல், நூலாக அறிமுகமாக வெளியாக உள்ளதை நடிகர் சூர்யா அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார்.
 

'ஜெய்பீம்' திரைப்படம் குறித்து படக்குழுவினர் இடையேயான கலந்துரையாடல் நூலாக வெளியாக உள்ளது. இது குறித்த தகவலை நடிகர் சூர்யா தன்னுடைய நிறுவனத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். 

பிரபல இயக்குனர் டி.ஜே.ஞானவேலு இயக்கத்தில் சூர்யா வழக்கறிஞராக நடித்து கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் 'ஜெய்பீம்'. உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் இந்த திரைப்படம் மொழி, இனம், கடந்து சர்வதேச அளவில் ரசிகர்களால் ரசிக்கப்பட்ட படமாகவும் மாறியது.

8 வருட காத்திருப்புக்கு பின்பெற்றோரான சரவணன் மீனாட்சி சீரியல் செந்தில் - ஸ்ரீஜா! குவியும் வாழ்த்து!

1990களில் நடந்த உண்மை கதையை கருவாக வைத்து உருவான இந்த படத்தில், இயக்குனர் டி.ஜே.ஞானவேலு இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த தம்பதி மீது காவல்துறையால் நிகழ்த்திய மனித உரிமை மீறல்களை தோலுரிக்கும் விதமாக இந்த படம் எடுக்கப்பட்டது. 
 

இந்த படம் வெளியாகி பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளான நிலையில், அனைத்தையும் கடந்து 'ஜெய்பீம்' திரைப்படம்ஆஸ்கர் பட பட்டியலில் 100 படங்களில் ஒன்றாக இடம்பெற்றது. பின்னர் எதிர்பாராத விதமாக இப்படம், அந்த பட்டியலில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

கவர்ச்சிக்கு தாவிய பிரியா பவானி ஷங்கர்..! சல்லி சல்லியாய் ஓட்டை போட்ட உடையில்.. இடையை காட்டி ஒய்யார போஸ்!

இந்நிலையில் இந்த படத்தில் படக்குழுவினருடனான கலந்துரையாடல் குறித்த இடம்பெறும் வகையிலான புத்தகத்தை 2023 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற உள்ள புத்தக வெளியீட்டு விழாவில், வெளியிட ஏற்பாடு செய்துள்ளார். இது குறித்து நடிகர் சூர்யா தன்னுடைய 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் மூலம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார். இதனை அருண் என்பவர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய சீரியலை விட்டு விலகும் பிரியதர்ஷினி..! வெளியான பரபரப்பு காரணம்!

click me!