சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீசான பிரின்ஸ் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் அவர் அடுத்த படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கு காரணம் அவரது அடுத்த படமான மாவீரன்-ஐ இயக்கி வருவது மண்டேலா படத்துக்காக தேசிய விருது வென்ற இயக்குனரான மடோன் அஸ்வின்.
24
அதுமட்டுமின்றி இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்க உள்ளார். மேலும் இதில் வில்லனாக பிரபல இயக்குனர் மிஷ்கின் நடித்து வருகிறார். மாவீரன் படத்தின் ஷூட்டிங் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. தற்போது வரை இப்படத்தின் ஷூட்டிங் 40 சதவீதம் முடிந்துள்ளது.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த மாவீரன் படத்தின் ஷூட்டிங் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீரென நிறுத்தப்பட்டது. இயக்குனர் மடோன் அஸ்வினுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையின் காரணமாகத் தான் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
44
ஆனால் உண்மையில் ஷூட்டிங் நிறுத்தப்பட்டதற்கு காரணமே வேற. அது என்னவென்றால், சென்னையில் தற்போது கனமழை பெய்து வருவதால் தான் மாவீரன் பட ஷூட்டிங்கை நிறுத்தி வைத்துள்ளார்களாம். வருகிற திங்கட்கிழமை முதல் மீண்டும் ஷூட்டிங் தொடங்க உள்ளதாம். இதன்மூலம் இயக்குனருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே சண்டை என்பது வெறும் வதந்தி என்பது தெரியவந்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.