தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, அரியவகை தசை அழற்சி நோயான மயோசிடிஸ் என்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டு, கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் மிக விரைவாக குணமடைய வேண்டும் என அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானதை தொடர்ந்து, ஹைதராபாத்தில் உள்ள அப்பலோ மருத்துமனையில் சமந்தா அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் சமந்தாவின் செய்தி தொடர்பாளர் இந்த தகவலை மறுத்ததோடு, சமந்தா தன்னுடைய ஹைதராபாத் வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாக தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில், தென்கொரியா செல்ல இருப்பதாகவும் அங்கு அவர் சில மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்று உடல்நலம் அடைந்த பின்னர் மீண்டும், படப்பிடிப்பு பணிகளில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.