அதில் அவர் கூறியதாவது : “இது ரொம்பவே வெறுப்பான கேள்வி தான். நான் 15 வருஷம் சினிமாவுல கஷ்டப்பட்டு வந்தேன். நான் இருக்கேன் அப்படிங்குற நம்பிக்கைல சில பேர் வரதான் செய்வார்கள். அதுமாதிரி ஒன்னு ரெண்டு நடக்கத்தான் செய்யும். நான் வரும்போது எனக்கு யாருமே இல்ல. நான் கஷ்டப்பட்ட மாதிரியே எல்லாரும் கஷ்டப்படனும்னு அவசியமில்லை. எனக்கு ரஞ்சித் அண்ணேன் ஒரு ஸ்பேசை உருவாக்கினார். அவர் மட்டும் இல்லேனா இவ்வளவு வீரியமான படங்கள் செய்திருப்பனா என எனக்கு தெரியாது.
சக மனிதர்களோட உதவி இல்லாம இங்க யாருமே ஜெயிக்க முடியாது. ராம் மட்டும் இல்லயென்றால் நான் என்ன ஆகிருப்பேன். என்கூட வேலை செய்யும் எல்லாருக்கும் தெரியும், நான் அப்படி வாய்ப்பளிப்பதில்லை என்று. எல்லாரும் வேற வேற வாழ்வியல்ல இருந்து வந்தவர்கள்” எனக்கூறி தன்மீதான விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதையும் படியுங்கள்... மாமன்னன் படத்தில் நெகடிவாக இருந்தது என்ன?.. உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்த அல்டிமேட் காமடி வீடியோ!