AK 62 துணிவு கொடுத்த தைரியத்தில்.., மீண்டும் நேருக்குநேர்! குழம்பித் தவிக்கும் லைக்கா நிறுவனம்!

First Published Mar 11, 2023, 12:02 PM IST

துணிவு படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து AK62 படத்திற்காக அஜத் புதுப்புது கண்டிஷன்களை போடுவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்து, தயாரிப்பு நிறுவனம் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
 

நடிகர் அஜித்தின் துணிவு திரைப்பட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் AK62 திரைப்படத்தின் அறிவிப்பு எப்போது தான் வரும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்போலவே அஜித் படம் குறித்து வெளிவரும் செய்திகளும் இணையதளத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது. தற்போது ஏகே 62 படம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அடுத்த வாரம் வெளிவர இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது. .
 

அஜித்தின் ஏகே62 படம் குறித்து இயக்குனர் மகிழ்திருமேனி தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராக இருக்கும் இந்த திரைப்படத்திற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் தற்போது தயார் நிலையில் உள்ளது. அதிலும் படத்தின் பெயரை அறிவித்த நாளிலேயே முதற்கட்ட ஷூட்டிங்கை நடத்தவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.
 

அவ்வகையில் சென்னையிலேயே 10 நாட்கள் இடைவிடாத முதற்கட்ட படப்பிடிப்பு நடக்க இருக்கிறதாம். அதையடுத்து முழு மூச்சாக அடுத்தடுத்த கட்ட படப்பிடிப்பையும் நடத்தி முடித்து விட திட்டமிட்டிருக்கிறது. எதற்காக இவ்வளவு அவசரம் என தோன்றலாம். ஏற்கனவே படத்தின் இயக்குனர் மாற்றப்பட்டபோது அதிக கால தாமதம் ஆகிவிட்டது. இதில் படப்பிடிப்பையும் நீண்ட நாள் இழுத்தடித்தால் நடிகர் அஜித் போட்ட திட்டமே கெட்டுப்போய்விடும் என்பதற்காக தான் இந்த அவசரமாம்.
 

அப்படி என்ன திட்டம் என கேட்கிறீர்களா? ஏகே 62 படத்தை விஜயின் ''லியோ''-வுடன் மோதுவதற்கு அஜித் ஆசைப்படுகிறாராம். ஏற்கனவே துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் நேருக்கு நேர் மோதி கோலிவுட்டை அதிர வைத்தது. அதில், துணிவுக்கு கிடைத்த வரவேற்பு அஜித்தை உற்சாகமாக்கியுள்ளது. அந்த புத்துணர்ச்சியில் தான் அவர் இப்போது அடுத்த படத்தையும் விஜய்யுடன் மோதுவதற்கு ஆசைப்படுகிறாராம்.

ரியல் No.1 இவர்தான்.. நடிகர் விஜயை பின்னுக்கு தள்ளிய அல்லு அர்ஜுன்.! எவ்வளவு சம்பளம் தெரியுமா..?
 

அஜித்தின் இந்த ஆசை மற்றும் கண்டிஷனை கேட்ட லைக்கா தயாரிப்பு நிறுவனம் தற்போது அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. ஏனெனில் இப்போது படத்தை ஆரம்பித்தாலும் குறிப்பிட்ட காலத்திற்குள் படப்படிப்பை முடித்து விட முடியுமா என குழம்பிபோயுள்ளனர்.

தற்போது, விஜய்யின் ''லியோ'' படத்தின் படப்பிடிப்பு தற்போது படு ஜோராக நடைபெற்று வருகிறது. மே மாத இறுதிக்குள் முழு படப்பிடிப்பையும் முடித்துவிட்டு அடுத்த கட்ட பணிகளை ஆரம்பிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மும்முரம் காட்டி வருகிறார். இந்தகைய சூழலில் இரு படங்களும் மோதுவது எப்படி சாத்தியம் என்பது தெரியவில்லை. ஆனாலும் மீண்டும் ஒரு நேருக்குநேர் வெளியானால் கோலிவுட்டில் கொண்டாட்டம் தான்.

click me!