கடந்த 48 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்திய திரை உலகையே தனது இசையால் கட்டி போட்டிருக்கும் ஒரு கலைஞன் என்றால் அது நிச்சயம் இசைஞானி இளையராஜாவாக தான் இருக்க முடியும். உலக அளவில் உள்ள சிறந்த இசையமைப்பாளர்களை பட்டிலிட்டால், அதில் டாப் 10 வரிசையில் நிச்சயம் இளையராஜா இருப்பார் என்பது யாராலும் மறுக்க முடியாத ஒரு உண்மை. 1976ம் ஆண்டு வெளியான "அன்னக்கிளி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் தன்னுடைய இசை பயணத்தை இளையராஜா தொடங்கினார். இந்த 48 ஆண்டுகால கலை உலக பயணத்தில், பல்லாயிரக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்து, இசையின் ராஜாவாக திகழ்ந்து வருகிறார் இளையராஜா.
இளையராஜாவின் குடும்பத்தை பொருத்தவரை அவருடைய தம்பி கங்கை அமரன், மூத்த மகன் கார்த்திக் ராஜா, இளைய மகன் யுவன் சங்கர் ராஜா, அவருடைய மகள் மறைந்த பாடகி பவதாரணி என்று அனைவருமே இசைத் துறையில் மிகப்பெரிய உச்சங்களை தொட்டவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் குறிப்பாக இளைய இசைஞானியாக கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் தமிழ் திரை உலகில் பயணித்து வருகிறார் யுவன் சங்கர் ராஜா. பிரபல நடிகர் சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ் மற்றும் நக்மா உள்ளிட்ட பலர் நடித்து கடந்த 1997ம் ஆண்டு வெளியான "அரவிந்தன்" என்கின்ற திரைப்படத்தில் நான் முதல் முறையாக இசையமைப்பாளராக களம் இறங்கினார் யுவன் சங்கர் ராஜா.
இன்றைக்கு இளையராஜாவின் பாடல்களுக்கு இணையாக யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் மெய்மறந்து பலரால் ரசிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
34
Yuvan
இளைய இசைஞானி யுவன் சங்கர் ராஜா இசையில் ஏற்கனவே இந்த ஆண்டு தமிழில் "பொன் ஒன்று கண்டேன்", "ஸ்டார்", "கருடன்", "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" தெலுங்கு மொழியில் "கேங்ஸ் ஆப் கோதாவரி" ஆகிய திரைப்படங்கள் வெளியான நிலையில், மேலும் இந்த 2024ம் ஆண்டு இயக்குனர் ராமின் "ஏழு கடல் ஏழு மலை" என்கின்ற படம் வெளியாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழில் மட்டும் இன்னும் அவருடைய இசையில் 9 திரைப்படங்கள் வெளியாக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. என்ன தான் 1997ம் ஆண்டு முதல் இசை பயணத்தில் யுவன் சங்கர் ராஜா பயணித்து வந்தாலும், அதற்கு முன்னதாகவே அவருடைய டியூன்கள் தமிழ் திரை உலகில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
44
yuvan and ilayaraja
ஆம்.. கடந்த 1979ம் ஆண்டு பிறந்த யுவன் சங்கர் ராஜா, தன்னுடைய எட்டாவது வயதில் ஒரு பாட்டுக்கான டியூனை இசையமைத்திருக்கிறார். அதை கேட்டதும் இளையராஜாவிற்கு பெரிய அளவில் பிடித்து போயுள்ளது. இந்த சூழலில் கடந்த 1987ம் ஆண்டு இயக்குனர் சி.பி ராஜேந்திரன் இயக்கத்தில், பிரபல நடிகர் பிரபு, நடிகை ராதா, ஜெயஸ்ரீ மற்றும் சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் நடித்து வெளியான "ஆனந்த்" என்கின்ற திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜாவின் அந்த குறிப்பிட்ட ஒரு மெட்டை இளையராஜா தனது பாடலில் பயன்படுத்தியிருக்கிறார். அந்த திரைப்படத்தில் எஸ்பி பாலசுப்ரமணியம் பாடிய "பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று" என்கின்ற பாடலில், யுவன் சங்கர் ராஜா எட்டு வயதில் போட்ட மெட்டை பயன்படுத்தி அசத்தியிருக்கிறார் இளையராஜா.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.