ஒரே பாடகரை வைத்து, மொத்த படத்தையும் முடித்த இளையராஜா - மெகா ஹிட்டான அந்த படம் எது தெரியுமா?

First Published Oct 24, 2024, 4:31 PM IST

Ilayaraja Music : பொதுவாக ஒரு திரைப்படத்தில் குறைந்தது இரண்டு பாடகர்கள் இடம் பெற்றிருப்பார்கள், ஆனால் ஒரே ஒரு பாடகரை வைத்து மொத்த திரைப்படத்திற்கான இசையையும் அமைத்து அசத்தியிருக்கிறார் இளையராஜா.

Ilayaraja

தமிழ் திரை உலகில் "அன்னக்கிளி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 1976ம் ஆண்டு தனது கலை பயணத்தை தொடங்கியவர் தான் இளையராஜா. கடந்த 48 ஆண்டுகளாக, இசையின் அரசனாக தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் இந்திய இசை உலகில் ராஜாவாக திகழ்ந்து வருகிறார் இசைஞானி இளையராஜா என்றால் அது சற்றும் மிகையல்ல. அவருடைய அசாத்திய இசையில் உருவான எண்ணற்ற பாடல்கள் பல்வேறு சிறப்புகளை பெற்றவை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பல மேலைநாட்டு இசைகளை கூட, தமிழுக்கு கொண்டு வந்த பெருமையும் இளையராஜாவை தான் சேரும். இவருடைய குடும்பத்தில் தம்பி, மகன்கள் மற்றும் மகள் என்று அனைவருமே இசைத்துறையில் மிகப்பெரிய அளவில் சாதனைகள் படைத்து வருவது குறிப்பிடத்தக்கது. 

ரேவதியா இது? முடியெல்லாம் நரைத்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே!

Music Director ilayaraja

ஒரு காலகட்டத்தில் இளையராஜாவின் இசைக்காக மட்டுமே ஓடிய திரைப்படங்கள் எத்தனையோ உண்டு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், ராமராஜன், கேப்டன் விஜயகாந்த், மைக் மோகன் என்று, இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்து வரும் பல சூப்பர் ஹிட் ஹீரோக்களின் தனிபட்ட சினிமா வாழ்க்கையில், இசை மூலமாக மிக முக்கிய பங்கு வகித்தவர் இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos


Ilayaraja Songs

இந்த சூழலில் இசைஞானி இளையராஜா புகழின் உச்சத்தில் இருந்த காலத்தில் வெளியான திரைப்படம் தான் "முதல் மரியாதை". இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் பாரதிராஜா, நடிகர் திலகம் சிவாஜி கணேசனை வைத்து மிக நேர்த்தியாக இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தில் சிறிதும் பெரிதுமாக மொத்தம் எட்டு பாடல்கள். அந்த பாடல்கள் அனைத்துக்கும் வரிகள் எழுதியது கவிப்பேரரசு வைரமுத்து என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் ஒழித்த பாடல்களை சித்ரா மற்றும் எஸ். ஜானகி ஆகிய இருவரும் தான் இணைந்து பாடியிருந்தார்கள். ஆனால் இந்த படத்தில் இரண்டு சிறப்புகள் இருக்கிறது. முதலாவது, இந்த படத்தின் கதை கொஞ்சம்கூட பிடிக்வில்லை என்றும், தான் இசை மேல் கொண்ட மரியாதைக்காக அந்த படத்திற்கு இசை அமைத்ததாக இளையராஜா கூறியிருக்கிறார்.

Malaysia Vasudevan

இது ஒருபுறம் இருக்க இந்த திரைப்படத்தில் வந்த 8 பாடல்களில், 6 பாடல்கள் ஆண் குரலில் ஒளிந்திருக்கும். அதில் நான்கு பாடல்களை மலேசியா வாசுதேவனை வைத்து தான் இசையமைத்தார் இளையராஜா. அது மட்டுமல்லாமல் மலேசியா வாசுதேவனைத் தவிர வேறு எந்த பாடகரம் இந்த படத்தில் பாடியிருக்க மாட்டார்கள். இளையராஜா அவர்களே இரண்டு பாடல்களில் தனது சொந்த குரலை பயன்படுத்தி இருப்பார். அதைத் தாண்டி மலேசியா வாசுதேவன் குரலில் மட்டுமே இந்த படத்தின் அனைத்து பாடல்களும் ஒலித்திருக்கும்.

பழைய சீரியல்களுக்கு முடிவு கட்டிட்டு.. 3 புதிய தொடர்களை களமிறக்கும் சன் டிவி!

click me!