லண்டனில் சிம்பொனி சாதனை நிகழ்த்தி விட்டு தாயகம் திரும்பிய இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் நேற்று பாராட்டு விழா நடந்தது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள், எம்.பி.க்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட திரையுலகை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
இளையராஜா பெயரில் விருது
விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இளையராஜாவுக்கு புகழாரம் சூட்டியதுடன், அவரது பெயரில் விருது வழங்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், தனக்கு பாராட்டு விழா நடத்திய தமிழக அரசுக்கு இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியிட்ட அவர், ''தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில், அதீத மகிழ்ச்சியின் காரணமாக என்னால் அதிகம் பேச இயலவில்லை.