Samantha: 'மனம் நொந்து இறந்து விடுவேன்' என நினைத்தேன்.! பகீர் கிளப்பிய சமந்தா அவரே கூறிய அதிர்ச்சி காரணம்?

First Published Dec 7, 2021, 4:57 PM IST

நடிகை சமந்தா (Samantha) தற்போது கொடுத்துள்ள பேட்டி ஒன்றில், விவாகரத்தால் மனம் நொந்து இருந்து விடுவேன் என பகீர் தகவலை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு Ye Maaya Chesave என்கிற படத்தில் இணைந்து நடித்ததன் மூலம், நண்பர்களாக பழக துவங்கிய இவர்கள் பின்னர் காதலர்களாகவும் மாறினர். இவர்களது காதல் விவகாரம் வெளியே வர துவங்கிய பின்னர், இரு வீட்டு சம்மதத்துடன்... கோவாவில் மிக பிரமாண்டமாக, கோடி கணக்கில் செலவு செய்யப்பட்டு இவர்களுடைய திருமணம் 2017 ஆம் ஆண்டு மிக பிரமாண்டமாக நடந்தது.

திருமணத்திற்கு பின், திரைப்படங்களில் சமந்தா நடித்து வந்தாலும் ஒரு பொறுப்பான மருமகளாகவும், அனைவரும் பொறாமை கொள்ளுபடி நடந்து கொண்டார். தன்னுடைய குடும்பத்தில் என்ன, விசேஷம் நடந்தாலும், படப்பிடிப்பு பணிகளை ஒதுக்கி வைத்து விட்டு கலந்து கொள்வது சமந்தா சமத்து பொண்ணு.

சமந்தா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இருந்து குடும்ப பெயரான அக்கினேனி என்கிற பெயரை நீக்கியத்தில் இருந்தே... நாகசைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாக தகவல் வெளியாகதுவங்கியது .

சுமார் இரண்டு மாதத்திற்கும் மேலாக விவாகரத்து குறித்த தகவலுக்கு வாய் திறக்காமல் இருந்த சமந்தா - நாக சைதன்யா ஜோடி, பின்னர் செப்டம்பர் மாதம் தங்களுடைய விவாகரத்து குறித்து ஒரே நேரத்தில் தெரிவித்தனர்.

விவாகரத்துக்கு பின்னர், இருவரது பிரிவு குறித்தும் வெளியான தகவல்களுக்கு பதிலடி கொடுத்து வந்த சமந்தா, மீண்டும் திரைப்படங்களில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருவதை பார்க்க முடிகிறது.

அதிலும் தமிழ் - தெலுங்கு படங்களை தொடர்ந்து, பாலிவுட் - ஹாலிவுட் ரேஞ்சுக்கு சென்று கெத்து காட்டி வருகிறார். இந்நிலையில் இவர் பேட்டி ஒன்றில் விவாகரத்து பிரிவு குறித்து பேசியுள்ளது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மனதளவில் தான் மிகவும் பலவீனமானவள் என்றும், எனவே விவாகரத்து பிரிவால் மனம் நொந்து இறந்து விடுவேன் என நினைத்தேன் என கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். ஆனால் இவ்வளவு வலிமையாக இருப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார்.

click me!