வி.ஜே.சித்ரா கன்னத்திலும் அந்த இடத்திலும் ரத்த காயம் வந்தது எப்படி..? பரபரக்கும் விசாரணை..!

First Published Dec 9, 2020, 12:32 PM IST

மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டு இறந்ததாக கூறப்படும் வி.ஜே. சித்ரா கன்னத்தில் ரத்த காயம் உள்ள விஷயம், உண்மையில் இவர் தற்கொலை செய்து கொண்டு தான் இறந்தாரா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சித்ரா. இவர் பேசும் அழகு தமிழிலும், முக அசைவிற்குமே பல ரசிகர்கள் உள்ளனர்.
undefined
இந்நிலையில் வி.ஜே.சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மன அழுத்தம் காரணமாக இவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படும் நிலையில் இவரது உடலில் ஆங்காங்கு உள்ள ரத்த காயங்கள் இவரது மரணத்தில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
undefined
வி.ஜே. சித்ராவும் அவரது வருங்கால கணவர் ஹேமத்தும், சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இருவருக்கும் இடையே ஏதானும் பிரச்சனை நடந்ததா என தெரியவில்லை, உடை மாற்ற போவதாக ஹேமத்தை வெளியே செல்ல சொல்லவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
undefined
இது குறித்து தற்போது போலீசார் சித்ரா தற்கொலை செய்து கொண்ட ஓட்டலில் வேலை செய்யும் அணைத்து ஊழியர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சித்ராவின் கன்னத்திலும், தாவங்கட்டையும் பெரிய அளவிலான ரத்த காயம் உள்ளது எனவே உண்மையில் இவர் தற்கொலை செய்து கொண்டு தான் இறந்தாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
undefined
click me!