இரவு முழுவதும் செம்ம ஹேப்பியாக இருந்த சித்ரா... அதிகாலையில் தற்கொலை செய்து கொண்டது ஏன்?

First Published Dec 9, 2020, 11:02 AM IST

பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா திடீர் தற்கொலை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், இரவு முழுவதும் அவர் செய்த செயல்கள் இப்படி இருந்தவர் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாடல், விஜே, டான்சர் என பன்முக திறமை கொண்ட சித்ராவுக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
undefined
முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ராவை அனைவரும் தங்கள் வீட்டு பெண்ணாகவே பார்க்கும் அளவிற்கு இல்லத்தரசிகள் இதயத்தில் இடம் பிடித்தார்.
undefined
ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த சித்ராவுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஹேம் நாத் என்பவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வரும் ஜனவரி மாதம் திருமணத்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.
undefined
சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த சித்ரா படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நாசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார். அவருடன் வருங்கால கணவரான ஹேம் நாத்தும் இருந்துள்ளார்.
undefined
இருவரும் ஒரே அறையில் தங்கியிருந்த நிலையில் சித்ரா குளிக்க செல்வதால் ஹேம் நாத்தை வெளியே அனுப்பியுள்ளார். சிறிது நேரம் கழித்து கதவை திறக்க முயன்ற ஹேம் நாத்உள்பக்கம் பூட்டியிருந்ததால் ஓட்டல் ஊழியர்களை அழைத்து மாற்று சாவி மூலம் அறையை திறந்துள்ளார். அப்போது சித்ரா சேலையில் தூக்கிட்டு சடலமாக தொங்கியுள்ளார்.
undefined
தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், சித்ரா நேற்று இரவு முழுவதும் இன்ஸ்டாகிராமில் செம்ம ஹேப்பியாக பதிவிட்ட ஸ்டோரிக்கள் இதுவரை லைக்குகளை குவித்து வருவது ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
undefined
விஜே சரண்யாவுடன் சிரித்த முகத்துடன் சேட்டை போஸ் கொடுத்து வீடியோ எடுத்துள்ள சித்ரா, அதை தனது சுமார் 13 மணி நேரத்திற்கு முன்னதாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக பதிவிட்டுள்ளார். இரவு முழுக்க நல்ல மகிழ்ச்சியான மனநிலையில் இருந்த சித்ரா, அதிகாலை தற்கொலை செய்து கொள்ள வேண்டிய காரணம் என்ன என்பது அனைவருக்கும் மிகப்பெரிய குழப்பமாக அமைந்துள்ளது.
undefined
click me!