சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வந்த அண்ணாத்த படப்பிடிப்பு கடந்த 14ம் தேதி ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியது. கடும் கட்டுப்பாடுகளுடன் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பில் பங்கேற்ற 4 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து படப்பிடிப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
undefined
இதனிடையே ரஜினிக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா சிகிச்சையில் அவருக்கு முடிவு நெகட்டிவ் என வந்தது. இருப்பினும் ஐதராபாத்திலேயே தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
undefined
இன்று காலை திடீரென்று ரஜினிக்கு ரத்த அழுத்தம் சீராக இல்லாத காரணத்தால் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலைச் சீராக இருப்பதாகவும், தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்தது.
undefined
ரஜினிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து பலரும் அவரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்து வருகின்றனர். திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் சூப்பர் ஸ்டார் நலம் பெற வேண்டுமென சோசியல் மீடியாக்களில் வாழ்த்து கூறி வருகின்றனர்.
undefined
ரஜினியின் உடல்நிலை குறித்து தற்போது அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ரஜினிகாந்தின் உடல்நிலை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவரது ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க சரியான அளவு மருந்துகள் தரப்படுகின்றன. அவர் இன்றிரவு மருத்துவமனையில் இருப்பார். நாளை மேற்கொண்டு அவரது ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்று பார்க்கப்படும். அவர் ஆரோக்கியமாக, ஓய்வில் இருக்கிறார்.
undefined
யாரும் அவரைப் பார்க்க அனுமதி இல்லையென்பதால் யாரும் அவரைப் பார்க்க வர வேண்டாம் என குடும்பத்தினரும், சிகிச்சை செய்யும் மருத்துவர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர். அவரது மகள் அவரோடு இருக்கிறார்.
undefined
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மருத்துவர்களுடன் தொலைபேசியில் பேசினார். ரஜினி அவர்கள் வேகமாகக் குணமடைய வேண்டும் என்று வாழ்த்தியிருக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
undefined