இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பிரம்மாண்ட திரைப்படமான பொன்னியின் செல்வன் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இப்படத்திற்கு அளித்து வரும் அமோக வரவேற்பால் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் உள்ளது. பாக்ஸ் ஆபிஸிலும் 6 நாட்களில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்து இப்படம் சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தை இயக்க மணிரத்னம் எவ்வளவு தொகையை சம்பளமாக வாங்கினார் என்பது குறித்த ஆச்சர்ய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவர் இப்படத்திற்காக இதுவரை ஒரு ரூபாய் கூட சம்பளமாக வாங்கவில்லை என்றும், இப்படத்தின் லாபத்தில் இருந்து ஒரு பங்கை சம்பளமாக பெற்றுக்கொள்ள அவர் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.