படத்தைப் பற்றி இயக்குனர் இகோர் கூறும்போது, “இந்தப் படம் ஒரு மோசமான மனிதனிடம் சிக்கி கொள்ளும் சில பெண்களைப் பற்றியது. ஹன்சிகாவின் கேரக்டர் தான் இந்தப் பெண்களை பிரச்சினையிலிருந்து காப்பாற்றுகிறது. பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான வன்முறைகளையும் படம் பேசுகிறது. இந்தக் கதையில் ரொமான்ஸுக்கு ஸ்கோப் இல்லை, இது ஒரு த்ரில்லராக இருக்கும்.
இப்படத்தில் ஹன்சிகா ஆடை வடிவமைப்பாளராக நடிக்கிறார் என அவர் தெரிவித்துள்ளார். “ஹன்சிகாவின் நடிப்புக்கு இன்னொரு பக்கத்தைக் காட்ட விரும்புகிறேன். அவரது பாத்திரம் ஒரு மென்மையான பேசும் பெண், ஆனால் அத்தகைய நபர்கள் பெரும்பாலும் மிகவும் தீவிரமான கோபத்தைக் கொண்டிருப்பார்கள். அத்தகைய அமைதியான நபர் தனது கோபத்தைக் காட்டினால் என்ன நடக்கும்? அதுதான் படம்” என்கிறார் இகோர்.