என்னிடம் 31 குழந்தைகள் இருக்கு... அந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது - ஹன்சிகா நெகிழ்ச்சி

First Published Jan 18, 2023, 1:56 PM IST

ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருவது குறித்து நடிகை ஹன்சிகா மோத்வானி, சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம்திறந்து பேசி உள்ளார்.

தமிழ் திரையுலகில் பப்ளி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. தனுஷின் மாப்பிள்ளை படம் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்த ஹன்சிகாவுக்கு, அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்தன. இதனால் குறுகிய காலத்திலேயே விஜய், சிம்பு, ஆர்யா, சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து டாப் ஹீரோயினாக உயர்ந்தார்.

உடல் எடை அதிகரித்ததால் சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த ஹன்சிகா தற்போது உடல் எடையை குறைத்த பின்னர் மீண்டும் நடிப்பில் பிசியாகி உள்ளார். இதுவரை 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் ஹன்சிகா. தற்போது இவர் கைவசம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் டஜன் கணக்கிலான படங்கள் உள்ளன.

கடந்த டிசம்பர் மாதம் 4-ந் தேதி நடிகை ஹன்சிகாவுக்கு திருமணமும் நடந்து முடிந்தது. அவர் சோஹைல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின் கணவருடன் ஜாலியாக வெளிநாட்டுக்கு ஹனிமூன் கொண்டாட சென்ற ஹன்சிகா, சமீபத்தில் தான் நாடு திரும்பினார். தற்போது இவர் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருவது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம்திறந்து பேசி உள்ளார்.

இதையும் படியுங்கள்... வசூலில் டபுள் செஞ்சுரி அடித்த வாரிசு... அதிகாரப்பூர்வமாக அறிவித்து அதகளப்படுத்திய தில் ராஜு

அதில் அவர் கூறியதாவது : “பண்டிகை நாட்களில் பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்று எனது அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்துள்ளார். நல்லது செய்தால் நமக்கு நல்லதே நடக்கும் என்றும் அவர் அடிக்கடி கூறுவார். அதனால் தான் நான் சினிமாவில் நடிக்க வந்த பின்னர் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுக்க ஆரம்பித்தேன்.

தற்போது என்னிடம் 31 குழந்தைகள் உள்ளனர். ஆதரவற்ற அந்த குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. பொங்கலுக்கு அவர்களுக்கு புத்தாடைகள் வாங்கிக் கொடுத்தேன். அப்போது அவர்களின் முகத்தில் இருந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. கடவுள் அருள் இருப்பதால் என்னுடைய வாழ்க்கை நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது” என உற்சாகம் பொங்க பேசி இருந்தார் ஹன்சிகா.

இதையும் படியுங்கள்... கோவிலுக்குள் செல்ல நடிகை அமலா பாலுக்கு அனுமதி மறுப்பு... ரோட்டில் இருந்தே தரிசனம் செய்ய வற்புறுத்தியதாக புகார்

click me!