தமிழ் திரையுலகில் பப்ளி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. தனுஷின் மாப்பிள்ளை படம் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்த ஹன்சிகாவுக்கு, அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்தன. இதனால் குறுகிய காலத்திலேயே விஜய், சிம்பு, ஆர்யா, சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து டாப் ஹீரோயினாக உயர்ந்தார்.
உடல் எடை அதிகரித்ததால் சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த ஹன்சிகா தற்போது உடல் எடையை குறைத்த பின்னர் மீண்டும் நடிப்பில் பிசியாகி உள்ளார். இதுவரை 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் ஹன்சிகா. தற்போது இவர் கைவசம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் டஜன் கணக்கிலான படங்கள் உள்ளன.
கடந்த டிசம்பர் மாதம் 4-ந் தேதி நடிகை ஹன்சிகாவுக்கு திருமணமும் நடந்து முடிந்தது. அவர் சோஹைல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின் கணவருடன் ஜாலியாக வெளிநாட்டுக்கு ஹனிமூன் கொண்டாட சென்ற ஹன்சிகா, சமீபத்தில் தான் நாடு திரும்பினார். தற்போது இவர் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருவது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம்திறந்து பேசி உள்ளார்.
இதையும் படியுங்கள்... வசூலில் டபுள் செஞ்சுரி அடித்த வாரிசு... அதிகாரப்பூர்வமாக அறிவித்து அதகளப்படுத்திய தில் ராஜு
அதில் அவர் கூறியதாவது : “பண்டிகை நாட்களில் பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்று எனது அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்துள்ளார். நல்லது செய்தால் நமக்கு நல்லதே நடக்கும் என்றும் அவர் அடிக்கடி கூறுவார். அதனால் தான் நான் சினிமாவில் நடிக்க வந்த பின்னர் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுக்க ஆரம்பித்தேன்.