விண்ணைத்தாண்டி வருவாயா 2-ம் பாகம் என்னாச்சு? - ஒரே அப்டேட்டில் ரசிகர்களை மெர்சலாக்கிய கவுதம் மேனன்

First Published May 9, 2022, 3:49 PM IST

VTV 2 : சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குனர் கவுதம் மேனன் விண்ணைத்தாண்டி வருவாயா 2-ம் பாகம் குறித்து முக்கிய அப்டேட்டை வெளியிட்டு உள்ளார்.

காதல் படங்கள் இயக்குவதில் கைதேர்ந்தவர் கவுதம் மேனன். இவர் இயக்கிய காதல் படங்களில் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட படம் என்றால் அது விண்ணைத்தாண்டி வருவாயா தான். கடந்த 2010-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. சிம்பு - திரிஷாவின் கெமிஸ்ட்ரியும், ஏ.ஆர்.ரகுமானின் இசையும் இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தன.

பொதுவாக ஒரு படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகிவிட்டால், அதன் இரண்டாம் பாகம் குறித்த எப்போது உருவாகும் என்கிற கேள்வி ரசிகர்களிடையே எழத்தொடங்கிவிடும். அந்த வகையில், விண்ணைத்தாண்டி வருவாயா 2 படம் எப்போது உருவாகும் என்கிற கேள்வி தொடர்ந்து எழுந்து கொண்டு தான் இருக்கிறது.

இதற்காக கொரோனா ஊரடங்கு சமயத்தில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்கிற குறும்படத்தை எடுத்து வெளியிட்ட கவுதம் மேனன். விண்ணைத்தாண்டி வருவாயா 2 உருவாவதை அதன் மூலம் சூசகமாக அறிவித்திருந்தார். ஆனால் இதன்பின்னர் பல்வேறு படங்களில் அவர் பிசியானதால் அப்படம் குறித்த பேச்சும் குறைந்தது. 

இந்நிலையில், சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குனர் கவுதம் மேனனிடம், சிம்பு - திரிஷாவை வைத்து எப்போது படம் எடுப்பீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு நிச்சயம் எடுப்பேன் என பதிலளித்த கவுதம் மேனன், விண்ணைத்தாண்டி வருவாயா 2 படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளும் நடந்து வருவதாக கூறினார். அவரின் இந்த பதில் சிம்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... ‘படிப்பும், நடிப்பும் சிறக்கட்டும்’ பிரபல நடிகரின் மகனுக்கு சிவகார்த்திகேயன் சொன்ன சர்ப்ரைஸ் வாழ்த்து

click me!