காதல் படங்கள் இயக்குவதில் கைதேர்ந்தவர் கவுதம் மேனன். இவர் இயக்கிய காதல் படங்களில் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட படம் என்றால் அது விண்ணைத்தாண்டி வருவாயா தான். கடந்த 2010-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. சிம்பு - திரிஷாவின் கெமிஸ்ட்ரியும், ஏ.ஆர்.ரகுமானின் இசையும் இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தன.
பொதுவாக ஒரு படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகிவிட்டால், அதன் இரண்டாம் பாகம் குறித்த எப்போது உருவாகும் என்கிற கேள்வி ரசிகர்களிடையே எழத்தொடங்கிவிடும். அந்த வகையில், விண்ணைத்தாண்டி வருவாயா 2 படம் எப்போது உருவாகும் என்கிற கேள்வி தொடர்ந்து எழுந்து கொண்டு தான் இருக்கிறது.
இதற்காக கொரோனா ஊரடங்கு சமயத்தில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்கிற குறும்படத்தை எடுத்து வெளியிட்ட கவுதம் மேனன். விண்ணைத்தாண்டி வருவாயா 2 உருவாவதை அதன் மூலம் சூசகமாக அறிவித்திருந்தார். ஆனால் இதன்பின்னர் பல்வேறு படங்களில் அவர் பிசியானதால் அப்படம் குறித்த பேச்சும் குறைந்தது.