அய்யோ, அதை நினைச்சா…இப்போ வரைக்கும் கஷ்டமா இருக்கு; தான் செய்தது ரொம்ப பெரிய தவறு; மனம் திறந்த கேப்ரியல்லா!

Published : Mar 19, 2026, 06:50 PM ISTUpdated : Mar 20, 2026, 11:15 AM IST

Gabriella Emotional Interview About Her Past Struggles : சீரியல் நடிகை கேப்ரியல்லா தான் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார் அது என்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
15
Serial Actress Gabriella

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஸ்டேன் ஆப் காமெடியில் அசத்தினார் கேப்ரியல்லா. இவர் டிக்டாக்கில் கருத்து சொல்லும் விதமாக சில வீடியோக்கள் வெளியிட்ட நிலையில் அது ரசிகர்களை கவர்ந்தது. இதனையடுத்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சுந்தரி சீரியல் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து இருக்கிறார், கேப்ரியல்லா. இவர் சமீபத்தில் கலந்து கொண்ட யூடியூப் சேனலில் தான் வாழ்க்கையில் செய்த பெரிய தவறு குறித்து பேட்டி அளித்துள்ளார். 

25
Serial Actress Gabriella Sellus

அதில், ”எங்க அப்பாவிற்கும் எனக்கும் பெரிய தகராறு வந்துவிட்டது. நான் நடனமாட கூடாது என்று முதல் முறையாக ஒரு ஃபுல் ஸ்டாப் வைத்தார். ஏற்கனவே அடிக்கடி ஏதாவது செய்து அடிக்கடி திட்டு வாங்குவேன். அப்போது நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன். அதை நினைத்து இப்போது வரை நான் கவலைப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். அந்த தவறை யாரும் செய்து விடக்கூடாது என்பதற்காக நான் இப்போது சொல்கிறேன்.

35
Gabriella Sellus emotional interview

அவர்களின் பேச்சுக்கள் மதிப்பு கொடுத்து நானும் திருச்சிக்கு கிளம்பி சென்றேன். அங்கு சென்ற பிறகுதான் ஒவ்வொருவரின் பார்வையும் என் மீது எப்படி இருக்கிறது என்று உணர்ந்தேன். அவனுடன் ஓடிப் போயிருப்பா, இவனுடன் ஓடிப் போயிருப்பா என்று என்மீது கேவலமான ஒரு பார்வை வந்தது. அதை பார்த்த போது நான் தவறுதான் செய்து விட்டேன் என்று எனக்கே ஒரு முறை தோன்ற வைத்து விட்டார்கள்.

சரோகேசி மூலம் குழந்தை? - விமர்சனங்களுக்கு அதிரடி பதில் சொன்ன இந்திரஜா சங்கர்

45
Eeramana Rojave 2 actress Gabriella

கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து எதையுமே யோசிக்காமல் பேருந்தில் எது சென்னைக்கு வந்து விட்டேன். முதல் முறையாக சென்னையில் பயத்துடன் பார்த்தேன். என் தோழி வீட்டில் நான் தங்கி இருந்தபோது நான் இங்கேதான் இருக்கிறேன் என்று ஒரு குறிப்பிட்ட சில நாட்களுக்கு பிறகு என்னுடைய பெற்றோருக்கு திறந்து விட்டது. அப்பொழுது என் தந்தை போன் செய்து நீ இல்லாமல் என் பொண்டாட்டி இறந்து விடுவாள் போல, உடனே நீ வீட்டுக்கு வா.

திருமணத்திற்கு நோ.. ஆனால் அந்த விஷயத்திற்கு ஓகே சொன்ன ஐஸ்வர்யா லட்சுமி

55
Gabriella Charlton Bigg Boss Tamil

கல்லூரிக்கு சென்று வந்தேன். என்னால் அதை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. என் பெற்றோரிடம் இனிமேல் நான் கல்லூரிக்கு செல்லவில்லை என்று சொல்லிவிட்டு வீட்டிலேயே அமர்ந்து விடலாம் என்று கூட நினைத்தேன். அப்போதுதான் அவர்கள் இது ஒன்றுமே இல்லை, நாங்கள் நடனம் ஆட விடாமல் தடுத்ததினால் மட்டுமே நீ சென்றாய். மற்றவர்களை நினைத்து நீ கவலை கொள்ளாதே நீதான் என் மனசு நீதான் என் கடவுள் நீதான் என் கௌரவம் என்று என் பெற்றோர் என்னிடம் சொன்னார்கள். அந்த வார்த்தை தான் என்னை இங்கு வரை கொண்டு சென்று இருக்கிறது " என்றார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories