தனுஷ் முதல்... லோகேஷ் கனகராஜ் வரை அணிந்திருக்கும் கருங்காலி மாலைக்கு இவ்வளவு பவரா? வெற்றியின் சீக்ரெட்!

Published : Jul 21, 2023, 04:32 PM ISTUpdated : Jul 21, 2023, 04:38 PM IST

பிரபலங்கள் பலர் விரும்பி அணிந்து கொண்டிருக்கும் கருங்காலி மாலை பற்றியும், அதனால் வரும் நன்மைகள் பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.  

PREV
15
தனுஷ் முதல்... லோகேஷ் கனகராஜ் வரை அணிந்திருக்கும் கருங்காலி மாலைக்கு இவ்வளவு பவரா? வெற்றியின் சீக்ரெட்!

சமீப காலமாக தமிழ் சினிமாவில், அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வரும்.. தனுஷ், லோகேஷ் கனகராஜ், சூரி, போன்ற பல பிரபலங்கள் இந்த, கருங்காலி மாலையை அணிந்து வருகிறார்கள். இந்த மாலை அணிந்த பின்னர், அவர்கள் வாழ்க்கையில் நடந்த மாற்றங்களும், அடுத்தடுத்து அவர்களுக்கு கிடைத்த வெற்றிகளும்... கண்ணுக்கு எதிராகவே நாம் பார்த்து வருகிறோம்.
 

25

சரி, அப்படி இந்த கருங்காலி மாலையில் என்ன தான் அற்புதம் மற்றும் மகிமைகள் நிறைந்துள்ளது... என்பது பற்றி பார்க்கலாம். கருங்காலி மரத்தை பொறுத்தவரை, இது மற்ற மரங்கள் போல் கிடையாதாம், பிராபஜந்தில் நிறைந்திருக்கும் பாசிட்டிவ் எனர்ஜியை தனக்குள் ஈர்த்து வைத்து கொள்ளும் ஆற்றல் இந்த மரத்திற்கு உள்ளதாம்.

கயலிடம் கையும் களவுமாக சிக்கிய எழிலின் அம்மா! திருமணத்தில் ஏற்பட்ட திடீர் ட்விஸ்ட்.. இனி நடக்க போவது இதுதான்!

35

இந்த மரத்தால் செய்யப்படும், மாலையை நாம் அணிவதால்... அந்த மாலை நம் உடலில் பட்டு, மரத்தில் உள்ள பாசிட்டிவ் எனெர்ஜியை  நமக்குள்ளும் ஊடுருவ செய்து, நம்மை பாசிட்டிவான நபர்களாக மாற்றுகிறது. சமீப காலமாக இந்த கருங்காலி மாலையை ஆன்மீக வாதிகள் பலர் அணிவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். அதே போல் மிகவும் கோபமாக நடந்து கொள்ளும் நபர்கள் மற்றும் நெகடிவ் எண்ணங்களால் அவதி படுபவர்களுக்கு இந்த மாலையை அணிய கூறி அறிவுறுத்தி வருகிறார்கள்.

45

காரணாம் இந்த மாலை அணிவதால், கோபத்தை கட்டு படுத்தி... மனதை சாந்தமாக்குகிறது. அதே போல் நம்மிடம் சண்டை போட வருபவர்களும் நம்பை பார்த்ததுமே கோபத்தை விட்டு விடுவார்களாம். இதன் வைப் நம்பை மட்டும் இன்றி, நம்பை சுற்றி உள்ளவர்களையும் பாசிட்டிவாக மாற்றுகிறது. இதன் காரணமாகவே தனுஷில் துவங்கி, லோகேஷ், சூரி, விக்ரம், உள்ளிட்ட பல  பிரபலங்கள் இந்த மாலையை விரும்பி அணிகிறார்களாம்.

அட கடவுளே... கார் வாங்கிய 6 மாதத்தில் விபத்தில் சிக்கிய குக் வித் கோமாளி சக்தி! வெளியான அதிர்ச்சி தகவல்!

55

இந்த மாலையை அணிவது பில்லி சூனியம் போன்ற... எதிர்மறை விஷயங்களை முறியடிக்கும் தன்மை கொண்டதாம். அதே போல், இந்த மாலையை இந்து மதத்தை சேர்ந்தவர்கள் தான் அணிய வேண்டும் என்பது இல்லை. இது இயற்கையாக ஒரு மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் மாலை என்பதால்... சாதி - மத தடை இன்றி, யார் வேண்டுமானாலும் அணியலாம். கருங்காலி மாலை அணிய நினைப்பவர்கள், அதை வாங்கி வந்து பாலில் சில மணிநேரம் ஊறவைத்து விட்டு அணிவது மிகவும் சிறப்பு. 

Read more Photos on
click me!

Recommended Stories