நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படத்தில் ராணுவ வீரராக நடித்திருந்தார் தளபதி. தெலுங்கு நாயகி பூஜா ஹெக்டே உடன் விஜயின் டூயட் பாடல்கள் மாஸ் ஹிட் அடித்தன. அனிருத் இசையில் தூள் கிளப்பி இருந்த இந்த படம் வசூல் ரீதியில் நல்ல கல்லா கட்டியிருந்தது.
24
varisu
தற்போது விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் வாரிசு படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் புஷ்பாநாயகி ராஷ்மீகா நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், பிரபு, ஷ்யாம், யோகி பாபு, குஷ்பூ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். குடும்ப செண்டிமெண்ட் கலந்த கமர்சியல் படமாக இந்த படம் உருவாகி வருகிறது. ஐதராபாத், சென்னையை அடுத்து மீண்டும் இந்த படம் ஹைதராபாத்தில் படப்பிடிப்பை துவங்க உள்ளதாக பேசப்படுகிறது.
இதற்கிடையே ஓய்விற்காக சென்னை வந்த விஜயின் புகைப்படங்கள் வைரல் ஆகின. தளபதியின் புகைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடி வருவது வழக்கமாகிவிட்டது. அதோடு இவர் குறித்த பிரபலங்களின் பேச்சுக்களும் தான் அந்த வகைகள் தற்போது கலகலப்பு படத்தில் சந்தானத்துடன் நடித்திருந்த சண்டைக்கலைஞர் கிருஷ்ணாவின் பேட்டி வைரல் ஆகி வருகிறது.
பிரபல இணையதளத்திற்கு இவர் கொடுத்துள்ள பேட்டியில் கலகலப்பு படத்தின் அனுபவங்கள் குறித்தும் மற்ற நடிகர்கள் தங்களை பார்க்கும் கண்ணோட்டம் குறித்தும் பேசி உள்ளார் கிருஷ்ணன். மேலும் நடிகர்களிலேயே விஜய் தான் சண்டை கலைஞர்களை மதிக்கும் ஒரே நடிகர் எனக் குறிப்பிட்டுள்ள கிருஷ்ணா அவரை சாகும் வரை மறக்க மாட்டேன் என உணர்ச்சி பொங்க பேசியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.