சேது.. இது பாலா இயக்கிய முதல் திரைப்படம், இந்த படத்திற்காக இவருக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் சிறந்த இயக்குனருக்கான விருதும் கிடைத்தது. தேசிய விருதும் கிடைத்தது, Filmfare விருதும் கிடைத்தது.
கரடு முரடான ஒரு இளைஞன், கடுப்பானால் அடித்து விட்டு பிறகு பேசும் மிகப்பெரிய கோவக்காரன், ஆனால் அவனுக்கு, சத்தமாய் பேசினால் கூட பயப்படும் ஒரு மெண்மையான பெண்ணின் மீது காதல் ஏற்படுகிறது. இந்த காதலை அவளிடம், அவன் பாணியில் சொல்கிறான், ஆச்சர்யப்படும் வகையில் அவளும் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். இனி எல்லாம் சுகமே என்று என்னும்போது நாயகன் பைத்தியமாகிறான், அதை பார்த்த காதலி பிணமாகிறாள்.
இந்த ஒரு திரைப்படம் சியான் விக்ரம் என்று இன்று உலகே போற்றும் ஒரு நடிகர் உருவாக காரணமாக இருந்தது என்றால் அது மிகையல்ல.
ஒருவழியாக துருவ நட்சத்திரம் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட ஹாரிஸ் ஜெயராஜ்