புஷ்பா 3 -ம் பாகத்தை கன்பார்ம் செய்த இயக்குனர்..பகத் பாசில் கொடுத்த ட்ரீட் நியூஸ்!

Published : Jul 19, 2022, 04:45 PM IST

பேட்டியில் புஷ்பா பார்ட் 2 வில் நானும் இருக்கிறேன். இது மிகவும் நல்ல கதை. பாகம் மூன்றும் தயாராகும் என இயக்குனர் தன்னிடம் தெரிவித்ததாக பகத் பாசில் கூறியுள்ளார்.

PREV
13
புஷ்பா 3 -ம் பாகத்தை கன்பார்ம் செய்த இயக்குனர்..பகத் பாசில் கொடுத்த ட்ரீட் நியூஸ்!
pushpa

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மாஸ் காட்டிய திரைப்படம் புஷ்பா தி ரைஸ். சுகுமார் எழுதி இயக்கியிருந்த இந்தப் படத்தை ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வந்தனர். பான் இந்தியா படமாக வெளியாகிய புஷ்பா அல்லு அர்ஜூனை தென்னிந்திய முன்னணி நடிகர்களில் ஒருவராக்கி விட்டது. ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஸ்ரீவள்ளியாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

மேலும் செய்திகளுக்கு..சர்ச்சை முடிய மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாயகியுடன் சாமி தரிசனம் செய்த பார்த்திபன்

முன்னதாக  நிறை வெளியான இதன் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தன. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் வெளியான ஒவ்வொரு பாடல்களும் சொல்லி அடித்தது. இதில் ஓ சொல்றியா மாமா என்னும் பாடலுக்கு பிரபல நடிகை சமந்தா குத்தாட்டம் போட்டிருந்தார். உலக அளவில் வெற்றி படமாக நிரூபித்த புஷ்பா ரூ.365 கோடி வசூலை பெற்றிருந்தது. இதன் பட்ஜெட் 200 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

23
pushpa

புஷ்பராஜ் என்னும் பெயரில் வரும் நாயகன் செம்மரக்கட்டை கடத்தும் கும்பலின் தலைவனாக இருக்கிறார். அதே தொழிலில் ஈடுபடும் மற்றவர்களுடனும் , வனத்துறையுடனும் புஷ்பராஜுக்கு ஏற்படும் பகையே புஷ்பா தி ரைசின் கதைக்களமாக இருந்தது.

மேலும் செய்திகளுக்கு..அச்சசோ.. சமந்தாவை அலேக்காக தூக்கியா அக்‌ஷய் குமார்.. வைரலாகும் டான்ஸ் வீடியோ இதோ!

இறுதியில் புஷ்பராஜின் எதிரிகளை சுட்டிக்காட்டி அடுத்த படத்திற்கான ஹிண்டை கொடுத்துவிட்டார் இயக்குனர். இதற்கிடையே கே ஜி எஃப் 2 படத்தைப் போல புஷ்பா 2வையும் இயக்க எண்ணிய இயக்குனர் சுகுமார், படத்திற்கான ஸ்கிரிப்டை இன்னும் மெருகுபடுத்தி வருவதோடு, மேலும் வில்லன்களை பாலிவுட்டில்  இருந்து இறக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படப்பிடிப்பும் தள்ளிப் போய் உள்ளது.

33
pushpa

மேலும் சமீபத்திய ஹிட் வில்லனான விஜய் சேதுபதி புஷ்பா 2 வில் இடம் பெற்றுள்ளதாக தகவல் பரவி வருகிறது. முந்தைய பாகத்தில் வனத்துறை அதிகாரியாக விஜய் சேதுபதி நடிக்க படக்குழு கேட்டுக் கொண்டதாகவும் ஆனால் விஜய் சேதுபதி அந்த கதாபத்திரத்தை ஏற்க மறுத்ததால், இரண்டாம் பாகத்தில் வேறு ஒரு ரோலுக்கு படக்குழு விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு.. கொசு வலையில் தைத்த உடையில்.. பக்க கிளாமர் போஸ் கொடுத்த ராஷ்மிகா மந்தனா..

இந்த படத்தின் புதிய அப்டேட்டாக பகத் பாசிலின் பேட்டி தான் தற்போது வைரலாகி வருகிறது.அந்த பேட்டியில் புஷ்பா பார்ட் 2 வில் நானும் இருக்கிறேன். இது மிகவும் நல்ல கதை. பாகம் மூன்றும் தயாராகும் என இயக்குனர் தன்னிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார். அதோடு இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு  விரைவில் தொடங்கும் எனவும் பகத் பாஸில் தெரிவித்துள்ளார். புஷ்பா 3 குறித்த இவரின் தகவல் ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories