தமிழ் சினிமாவில், 'கண்களால் கைது செய்' படத்தின் மூலம் தன்னுடைய சினிமா கேரியரை துவங்கியவர் பிரியா மணி. இவர் ஆரம்பத்தில் நடித்த படங்கள் வெற்றிபெறவில்லை என்றாலும்... நடிகர் கார்த்தி, இயக்குனர் அமீர் இயக்கத்தில் அறிமுகமான 'பருத்திவீரன்' படத்தில் முத்தழகு என்கிற கதாபாத்திரத்தில் நடித்தது இவருக்கு, சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றுத்தந்தது.