நெட்டிசன்ஸ் ரியாக்ஷன்
ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் அறிக்கைகள் இப்படி வெளியான நிலையில் ஜெயம் ரவியின் ரசிகர்கள் இணையத்தில் விவாதித்து வரும் விஷயங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. ஜெயம் ரவி பொறுத்தவரை அவர் திரை உலகிலும், அதற்கு பின்னாலும் மிகச்சிறந்த மனிதர். ஆனால் அவருடைய மனைவியின் தரப்பில் இருந்து திரைப்பட ரீதியாக அவருக்கு பெரிய அளவில் நெருக்கடி கொடுக்கப்படுவதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
ஜெயம் ரவியை காட்டிலும் மூன்று மடங்கு மிகப்பெரிய பணக்காரர் ஆர்த்தி, ஸ்விட்சர்லாந்தில் சந்தித்து ஜெயம் ரவி மீது காதல் கொண்டு தான், கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி அவரை திருமணம் செய்து கொண்டார். ஆர்த்தியின் அம்மா மிகப்பெரிய தயாரிப்பாளர், ஒரு சில திரைப்படங்களையும் பல சின்னத்திரை நாடகங்களையும் தொடர்ச்சியாக தயாரித்து வருகிறார். அதேபோல அவருடைய தந்தையும் ஒரு மிகப்பெரிய தொழில் அதிபர் ஆவார்.
ஆகவே ஆர்த்தியின் குடும்பத்தாரின் தலையீடு ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் அதிகம் இருப்பதாலும், தன்னால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்று ஜெயம் ரவி எண்ணியதாலும் தான் இப்போது இந்த விவாகரத்து முடிவை அவர் எடுத்துள்ளதாக ஜெயம் ரவியின் ரசிகர்கள் பரவலாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குடும்பத்தோடு காரில் சென்றபோது விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா! ஆத்திரத்தில் அசிங்கமாக பேசியதால் பரபரப்பு!