எல்ஐசி பட தலைப்பு என் நிறுவனத்தின் பெயரில் இருப்பதை அறிந்த விக்னேஷ் சிவன், என் மேலாளர் மூலம் என்னை தொடர்பு கொண்டார். இருப்பினும் அந்த தலைப்புக்கும் என் கதைக்கும் மிக நெருக்கமான சம்பந்தம் இருப்பதால் அந்த தலைப்பை நான் கொடுக்காத நிலையிலும், அதே தலைப்பை அவருடைய படத்திற்கு தலைப்பாக வைத்து விளம்பரப்படுத்த தொடங்கினார். இது எந்த வகையில் நியாயமாகும்? "உன்னால் என்ன செய்து விட முடியும்" என்கின்ற ஒரு அதிகார நிலையை தானே இது காட்டுகிறது. உங்களை விட பலம் வாய்ந்தவர்கள் என்றால் இரண்டு வருடம் பொறுமையோடு காத்திருந்து அவர்களிடம் அனுமதி கேட்கிறீர்கள்.
ஆனால் என்னை போன்ற எளியவர்களை ஏமாற்றுகிறீகள், உங்களுடைய செயலுக்கு நிச்சயம் நீங்கள் கடவுளின் மன்றத்தில் பதில் சொல்ல நேரிடும், என்று மிகவும் கட்டமான பதிவை வெளியிட்டுள்ளார்.
ரம்யா பாண்டியன் வெட்டிங் ரிசப்ஷனில் ஒன்று திரண்ட பிக்பாஸ் பிரபலங்கள்! வைரல் போட்டோஸ்!