இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியிருக்கும் அனந்தா படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நடைபெற்றது. இதில், இசையமைப்பாளர் தேவா, நடிகை சுகாசினி, பாடலாசிரியர் பா விஜய், பிக்பாஸ் அபிராமி, தலைவாசல் விஜய், பின்னணி பாடகர் மனோ, ஒய் ஜி மகேந்திரன், கலைப்புலி எஸ் தாணு, நிழல்கள் ரவி ஆகியோர் உள்பட ஏராளமான பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
24
அனந்தா டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா
ரஜினிகாந்தை வைத்து பாட்ஷா, அண்ணாமலை, வீரா, பாபா போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது அனந்தா என்ற படத்தை இயக்கியுள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு இளைஞன் என்ற தமிழ் படத்தை கடைசியாக இயக்கியிருந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பல படங்களை இயக்கியுள்ளார். உதவி இயக்குநராக பல படங்களில் பணியாற்றியுள்ளார்.
34
அனந்தா படத்தின் இசை வெளியீட்டு விழா
இந்த நிலையில் தான் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா கூறியிருப்பதாவது: அனந்தா படம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக சாய் பாபா என்னுடைய கனவில் தோன்றினார் என்றார். மேலும், இந்தப் படம் புட்டபர்த்தி பாபாவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. நான் கடந்த 2009 ஆம் ஆண்டு புட்டபர்த்தி பாபா கோயிலுக்கு சென்றேன். அப்போது தான் நான் முதல் முதலாக அந்த கோயிலுக்கு சென்றிருந்தேன். ஆனால், பாபா என்னைப் பார்த்து இத்தனை நாட்களாக எங்கு இருந்தாய் என்று கேட்டார். எனக்கு அந்த ஒரு நிமிடம் நம்பமுடியவில்லை. பிறகு நான் என்னுடைய வேலைகளை பார்க்க மீண்டும் ஒரு நாள் பாபா கனவில் தோன்றினார்.
44
இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா
சாய் பாபா கனவில் தோன்றியது குறித்து நான் என்னுடைய நண்பரிடம் கூறினேன். ஆனால், அவர் ஒரு அதிர்ச்சி செய்தியை என்னிடம் கூறினார். அவர் நேற்று தான் நாங்கள் சாய் பாபாவின் வாழ்க்கை வரலாறு படம் எடுப்பது குறித்து பேசிக் கொண்டிருந்தோம் என்றார். இதையெல்லாம் கேட்கும் போது எனக்கு சாய் பாபா இருக்கிறார். எப்போதும் என்னை சுற்றியே என்னை அவர் வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்று எனக்கு எண்ணம் தோன்றுகிறது.
அதன் பிறகு தான் அனந்தா படத்திற்கான கதையை எழுதினேன். அதுவும் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே நான் அந்தக் கதையை எழுதி முடித்துவிட்டேன் என்றார். இதற்கு முழு காரணமும் சாய் பாபா தான் என்றார். அனந்தா படத்தில் சுகாசினி, ஒய்.ஜி மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்துள்ளார்.