வரலாற்று கதையம்சம் கொண்ட படங்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் தயாராகும் வரலாற்று படங்களுக்கு தனிமவுசு என்றே சொல்லலாம். இதற்கு சான்று ராஜமவுலி இயக்கிய பாகுபலி, ஆர்.ஆர்.ஆர், மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் ஆகிய படங்களை சொல்லலாம்.
இதன் காரணமாக வரலாற்று படங்கள் இயக்கும் ஆசை பல்வேறு முன்னணி இயக்குனர்களுக்கு வந்துள்ளது. அவர்களின் இயக்குனர் ஷங்கரும் ஒருவர். தற்போது இந்தியன் 2 மற்றும் ஆர்.சி.15 போன்ற படங்களை இயக்கி வரும் ஷங்கர், அடுத்ததாக வரலாற்று படம் ஒன்றை இயக்க உள்ளார் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பே தகவல் வெளியானது.