அதன்படி தனது இயக்கத்தில் வெளியான ரஜினிமுருகன் படத்தின் இறுதி காட்சியில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் போஸ் பாண்டி கேரக்டர் இடம்பெறுவது போல் காட்டி இருப்பேன். அதேபோல் ரஜினிமுருகன் இரண்டாம் பாகத்தில் இரண்டு சிவகார்த்திகேயன், இரண்டு சூரி, நடிகைகள் கீர்த்தி சுரேஷ், ஸ்ரீதிவ்யா, நடிகர்கள் சத்யராஜ், ராஜ்கிரண் ஆகியோரை மையமாக வைத்து கதை தயார் செய்துவிட்டதாக கூறினார்.
அதற்கான ஸ்கிரிப்ட் தயாரிக்கும் பணியும் தற்போது நடைபெற்று வருவதாக தெரிவித்த பொன்ராம், இந்த ஐடியாவை சிவகார்த்திகேயனிடம் சொன்னபோது அவருக்கும் மிகவும் பிடித்துப்போனது. இருவருக்கும் நேரம் கிடைக்கும் போது இப்படம் நடக்கும் என பொன்ராம் அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... மருமகளாக நயன்தாரா எப்படி?... முதன்முறையாக நயன் பற்றி மனம்திறந்து பேசிய விக்னேஷ் சிவனின் தாயார்