குறிப்பாக இந்த திரைப்படத்தில் ஒலிக்கும் "காதல் கசக்குதையா" என்ற பாடல் ஆண்டுகள் பல கடந்தும் இன்றளவும் பலரால் ரசிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் வெற்றி விழாவின்போது இந்த ஆண்பாவம் திரைப்படத்தில் வரும் காதல் கசக்குதய்யா என்ற பாடலில், தன்னுடன் இணைந்து நடனமாடிய குரூப் டான்சர் அனைவரையும் பெயர் சொல்லி ஒருவர் பின் ஒருவராக மேடைக்கு அழைத்து, அவர்களுக்கு பரிசுகளும் கேடயமும் அளித்து கௌரவ படுத்தியிருக்கிறார் பாண்டியராஜன்.
ஆனால் இந்த விஷயம் குறித்து தெரியாமல் திடீரென மேடைக்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்ட அந்த குரூப் டான்ஸர்கள் அன்று கண்ணீர் மல்க பாண்டியராஜனுக்கு நன்றி கூறினார்களாம். இன்றைய காலகட்டத்தில் ஒரு திரைப்படம் ஹிட்டாகும் பொழுது படக்குழுவினர்களுக்கு பரிசுகள் வழங்கும் வழக்கம் இருந்து வருகிறது. ஆனால் 40 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அந்த விஷயத்தை செய்து காட்டி அசத்தியிருக்கிறார் பாண்டியராஜன்.
நடிகர் விஜய்யை விட படு பிரம்மாண்டமாக திருமண மண்டபம் கட்டிய எதிர்நீச்சல் சீரியல் நடிகை!!