Fact Check : டாக்சிக் படம் ஹிட்டாக வேண்டி... திருப்பதியில் மொட்டை அடித்தாரா நயன்தாரா? உண்மை பின்னணி இதோ

Published : Aug 19, 2026, 08:35 AM IST

Nayanthara Bald Look Photos Viral : நடிகை நயன்தாரா டாக்சிக் படம் வெற்றிபெற வேண்டி திருப்பதி கோவிலில் மொட்டை அடித்ததாக குறிப்பிட்டு சில புகைப்படங்கள் வைரலாகின்றன. அதன் உண்மை பின்னணியை பார்க்கலாம்.

PREV
14
Fact Check about Nayanthara Bald Look Photos

யஷ் மற்றும் நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள டாக்சிக் திரைப்படம் இம்மாத இறுதியில் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில், சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகை நயன்தாராவின் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நடிகை நயன்தாரா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மொட்டை அடித்துக் கொண்டு வேண்டுதல் செய்ததாகக் கூறி இரண்டு புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன. இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும், படத்திற்காக நயன்தாரா இவ்வளவு பெரிய வேண்டுதலை செய்தாரா என ஆச்சரியமடைந்தனர்.

'Toxic' டீசர் வைரல்: 5 ஹீரோயின்களை ஒரே டயலாக்கில் மிரட்டலாக அறிமுகப்படுத்திய யஷ்

24
நயன்தாரா மொட்டை அடித்தது உண்மையா?

ஆனால், வைரலாகும் இந்தப் புகைப்படங்கள் தத்ரூபமாக இருந்தாலும் அவை உண்மையானவை அல்ல. அந்த இரண்டு புகைப்படங்களுமே ஏஐ மூலம் எடிட் செய்யப்பட்டவையாம். கடந்த ஏப்ரல் மாதம் கணவர் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா திருப்பதி கோவிலுக்குச் சென்றபோது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தான் தற்போது ஏஐ மூலம் எடிட் செய்து அவர் மொட்டை அடித்திருப்பது போன்ற தோற்றத்தில் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

குறிப்பாக, தற்போதைய ஏஐ தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட புகைப்பட எடிட்டிங் கருவிகளின் உதவியுடன் ஒருவரின் முகம், தலைமுடி உள்ளிட்ட தோற்றங்களை மிக எளிதாக மாற்ற முடிகிறது. இதனால், உண்மையான புகைப்படங்களைப் போலவே தோன்றும் போலியான படங்களும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன. அந்த வரிசையில்தான் நயன்தாராவின் இந்த புகைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

34
திரைக்கு வரும் டாக்சிக்

இதனிடையே, கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள டாக்சிக் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ஹூமா குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 26ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

படத்தில் யஷின் சகோதரி கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்காக அவருக்கு சுமார் ரூ.15 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாகவும் திரையுலக வட்டாரங்களில் கூறப்படுகிறது. மேலும், இயக்குநர் கீது மோகன்தாஸுக்கும் நயன்தாராவுக்கும் இடையே நீண்டகால நட்பு இருப்பதால், இந்தக் கூட்டணி மீதும் ரசிகர்கள் தனி கவனம் செலுத்தி வருகின்றனர்.

44
டபுள் ரிலீஸ்

டாக்சிக் படம் ரிலீஸ் ஆன இரு தினங்களில் நயன்தாரா ஹீரோயினாக நடித்த மற்றொரு படமான ஹாய் திரைக்கு வருகிறது. இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நடித்துள்ளார் நயன். இப்படத்தை விஷ்ணு எடவன் இயக்கி உள்ளார். இவர் லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ஆவார். ஹாய் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி உள்ளார் விஷ்ணு எடவன். இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளது மட்டுமின்றி அப்படத்தை தன்னுடைய ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்தும் உள்ளார் நயன்தாரா. ஒரே வாரத்தில் நயன்தாரா நடித்த இரண்டு படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளதால் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories