உபேந்திராவை எல்லாம் இன்னும் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம். கன்னடத்தில் அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஹீரோவாக இருக்கிறார். அவரை ரஜினி ஒழித்து வைத்திருப்பதைப் போல காண்பிக்கிறார்கள். நாகர்ஜுனா கேரக்டர் எல்லாம் நன்றாக இருந்தது. ஒரு முழு வில்லன் ரோல் செய்து இருக்கிறார், கரெக்டாக செய்திருக்கிறார். அமீர்கான் போர்ஷனே தேவை இல்லை. அவர் இந்த படத்தில் நடித்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. வட இந்தியாவில் படத்தைக் கொண்டு சேர்ப்பதற்காக அமீர் கானை பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆனால், பணம் முடிந்த பிறகு அந்த கேரக்டர் தனியாக தொங்குகிறது. சில நேரம் சவுரி முடி கழன்று தொங்குமே. அதைப்போல் இருக்கிறது.
திரைக்கதை ஸ்கிரிப்பாக இல்லை. ரஜினியுடைய என்ட்ரி எங்கே இருந்திருக்க வேண்டும் என்றால் ‘தொட்ரா அவங்கள’ இன்று ஒரு டயலாக் வரும். அதற்கு பிறகு தான் ரஜினியை காண்பித்து இருப்பார்கள். அங்கிருந்துதான் கதையே இருந்திருக்க வேண்டும். எல்லோரும் சொன்ன ஆயிரம் கோடி வசூல் என்பதை லோகேஷ் கனகராஜ் எந்த இடத்திலும் நியாயப்படுத்தவில்லை. ஆயிரம் கோடி வசூல் என்று அவரும் சொல்லவில்லை. சன் பிக்சர்ஸும் சொல்லவில்லை. மூன்றாம் நபர்கள் யார் யாரோ சொன்னதை எல்லாம் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால், பொன்னியின் செல்வன் அளவுக்கெல்லாம் பார்ட் -1 வந்தது போல் எல்லாம் இல்லை, இருக்காது. பாகுபலி போல் கலெக்சன் எல்லாம் இந்தப் படத்தில் இருக்காது, வாய்ப்பு இல்லை.